|             |                               கலப்பு மணத்தைக் கடிந்துரை யாடினர்;           கலைத்தொழில் புரிந்தேன் கற்பினைப் பழித்தனர்;           மலைத்திலேன் சிறிதும், மனமுங் கூசிலேன்; |           45 |         
                  |             |                                 |             |         
                  |             |                                          வள்ளி குறிக்கோள் வாழ்வினள்  |             |         
                  |             |                                 |             |         
                  |             |                               அவர்முதன் மனையாள் அரும்பெறல் வள்ளி,           எவர்துயர்ப் படினும் எழுந்துடன் சென்று |             |         
                  |             |                               துன்பம் நீக்கலில் இன்பங் கொள்வாள்;           என்பும் பிறர்க்கே எனுங்குறி வாழ்வினள்;           பொதுநலத் தொண்டே புந்தியிற் பதித்தவள்;           எதுசரி எனமனம் ஏற்குமோ அதனைத்           துயர்பல நேரினும் துணிவுடன் ஆற்றும் |           50 |         
                  |             |                               அயர்விலாக் கணவர் அரும்பணிக் கியைந்தவள்;           அடிமை வாழ்வில் அருவருப் புற்று           விடுதலை வேட்டு வீறுற் றெழுந்த           நல்லவன் ஒருவனை நாய்மகன் சுடுங்கால்           ஒல்லென ஓடி ஒப்புயர் வில்லாள் |           55 |         
                  |             |                               தன்னெஞ் சேற்றுத் தான்மடிந் தனளே! |           60 |         
                  |             |                               இசைத்தொழில் புரியும் இவள்இத் தொழிலை           வசைத்தொழில் என்று வெறுத்திடல் என்கொல்? |             |         
                  |             |                                 |             |         
                  |             |                                          வள்ளியின் மகளே பூங்கொடி  |             |         
                  |             |                                 |             |         
                  |             |                               வன்னெஞ் சினர்அவ் வள்ளியின் வாழ்வை           இகழ்ந்ததும் அறிவேன்; என்வயி றீன்ற           மகளே யாயினும் வள்ளியின் மகளே           பூங்கொடி என்று பொருந்தினேன் ஆதலின் |             |         
                  |             |                               ஆங்கவள் தன்னை இசைத்துறை அறுத்துப்           பாங்குடன் பொதுநலப் பணிக்கே ஆக்கினென்; |           65 |         
                  |   |                                 |             |         
                  |             |                                          வடிவேல் படுகொலை  |             |         
                  |             |                                 |             |         
                  |             |                               ஆங்ஙனம் அன்றியும் அரும்பெறற் காதலர்           நிலத்தினில் மடமை நிறைந்திடல் கண்டு |             |         
                  |                      ---------------------------------------------------------------  |         
                  |             |                               என்பு - எலும்பு, புந்தி - மனம், இயைந்தவள் - பொருந்தியவள். |             |         
                  |   |             |             |