| 4. படிப்பகம் புக்க காதை | 
                  | இயற்கைக் காட்சிகள் | 
                  |  | 
                  |   | நங்கையும் தோழியும் நளிமலர்ச் சோலையுள் தங்கிய எழில்எலாம் தனித்தனி கண்டனர்;
 |  | 
                  |  |  |  | 
                  |  | தாமரைக் காட்சி |  | 
                  |  |  |  | 
                  |  | `செங்கதிர்ச் செல்வன் வெங்கதிர் புகுதாப் பொங்கிய நிழல்செறி பூம்பொழிற் கயத்துள்
 |  | 
                  |  | அடுத்தஓர் இரவலன் அகக்குறிப் புணர்ந்து கொடுத்தலால் மகிழ்ச்சி கூர்முகம் நோக்கி
 மகிழ்வால் விரியும் வள்ளல் மனம்போல்
 அகவிதழ் முறுக்கவிழ்ந் தலர்ந்த தாமரை
 இலைசூழ் மலர்கள் எழிலினைப் பாராய்!
 | 5 | 
                  |  | ஊடல் கொண்ட ஒண்டொடி முகம்போல் | 10 | 
                  |  | வாடிக் கவிழ்ந்த மலர்களும் காணுதி! |  | 
                  |  |  |  | 
                  | கொடிமலர்க் காட்சி | 
                  |  |  |  | 
                  |  | செடிகள் மரங்கள் சிரித்து மலர்ந்திடக் கொடிகள் நோக்கிக் கூடிக் குலாவத்
 தாவிப் படர்ந்து தாமும் நகைத்தன,
 |  | 
                  |  | வண்ணப் பூக்கள் வகைவகை மலர்ந்து கண்ணைப் பறிக்கும் காட்சியைப் பாராய்!
 | 15 | 
                  |  |  |  | 
          |  | வண்டுக் காட்சி |  | 
                  |  |  |  | 
                  |  | புதிதா வருவோன் பொருந்திய நண்பன் வதியிடன் அறிய வாயில் தோறும்
 |  | 
                  |           --------------------------------------------------------------- | 
                  |  | நளி - குளிர்ந்த, புகுதா - புகாத, ஒண்டொடி - ஒளிபொருந்திய           வளையலணிந்த பெண், வதியிடன் - தங்குமிடம். |  | 
                  |  |  |  |