| | மாமறு கோரம் வருவோன் எதிரில் வாடிய முகத்தன் வருதுயர் மனத்தை மூடிட முகுந்தன் முன்வரு வோனை `வீதியில் என்னெதிர் வருந்தினை வருவோய்! | |
| | ஏதம் உற்றது யாதென் றுரை'என, | 45 |
| | | |
| | முகுந்தன் துயரம் | |
| | | |
| | `மாதர் பூங்கொடி மலர்வனம் புகுவோள் வழிஎதிர்ப் படலும் வடிவேல் உற்ற வெந்துயர் நெஞ்சில் வேலெனத் தைக்க நொந்துழல் மனத்தேன் நும்வரல் அறியேன் | |
| | சிந்தனை நினைவொடு செல்லுதல் உற்றேன் யானுறும் இடும்பை இஃதே' என்றனன்; | 50 |
| | | |
| | கோமகன் ஆவல் | |
| | | |
| | மானிகர் விழியாள் மலர்வனம் புகுசொல் தேனெனப் பாய்ந்தது திருமகன் செவியில்; `ஒண்டொடி அவள்மன ஒப்புதல் பெற்றுத் | |
| | தண்டமிழ் நிகர்க்கும் தையல் கொழுநன் ஆவேன் யான்'என ஆவல் துரப்பக் காவிற் புகுந்துள பாவையைக் காண்பான் வில்விடு அம்பென விரைந்தனன் கோமகன்; | 55 |
| | | |
| பூங்கொடி வெருவுதல் |
| | | |
| | புகுவோன் றன்னைப் பூங்கொடிநோக்கி | |
| | `இகுளை! இம்மகன் என்மேற் காதல் மிகுமனத் தானென மேலொரு நாளில் தேன்மொழி அனையிடம் செப்பக் கேட்டுளேன் யானிவண் செய்வது யாது'என நடுங்கினள்; | 60 |
| --------------------------------------------------------------- |
| | தையல் - பெண் (பூங்கொடி), கா - சோலை, இகுளை - தோழி! அனை - அன்னை, இவண் - இங்கு. | |
| | | |