|  | 5. தாமரைக்கண்ணி தோன்றிய காதை |  | 
                  |  | கோமகன் கலக்கம் |  | 
                  |  | கோமகன் விழியிற் குலமகள் படுதலும் காமங் கதுவிய கருத்தின னாகிப்
 படிப்பகம் புகுதப் பார்த்தனன்; `அடஓ!
 சித்தமும் விழியும் சேர்ந்து பதிந்திடப்
 |  | 
                  |  | புத்தகம் பயில்வோர் பொருந்திடன் அன்றோ! புத்தகம் புரட்டும் புல்லென் ஓசையும்
 உரவோர் உயிர்க்கும் ஓசையும் அன்றி
 அரவம் சிறிதும் அறியா இடமாம்;
 அறிவை வளர்க்கும் ஆய்வுரை நூல்பல
 | 5 | 
                  |  | நிறைதரும் அவ்வகம் தூய்மை நிலையம்; கொள்கைச் சான்றோர் குழுமும் நூலகம்;
 உள்ளிற் செல்லுதல் ஒவ்வா தன்றோ!
 சீரியோர் பலரும் சீறுவர் இகழ்வர்
 வேறிடங் கூடுவென்' எனமனம் வெதும்பி
 | 10 | 
                  |  |  |  | 
                  |  | கோமகன் அல்லியை வினவல் |  | 
                  |  |  |  | 
                  |  | அகல்வோன் அல்லி அணிமுகம் நோக்கி `நகைமுக நங்காய்!என் நலிவினைக் காணுதி!
 இளையள் என்னை ஏற்றருள் வாள்கொலோ?
 உளையும் எனக்குயிர் உவந்தளிப் பாள்கொலோ?
 எத்திறத் தாள்நின் இளங்கொடி? உரை'எனச்
 | 15 | 
                  |  | சித்தங் கலங்கிச் செப்புவள் அல்லி, | 20 | 
                  |  |  |  | 
                  |  | அல்லியின் மறுமொழி |  | 
                  |  |  |  | 
                  |  | 'எத்தனை முறைநினக் கியம்புவென் பெரும! வித்தக! விண்மீன் வலையினிற் சிக்குமோ?
 |  | 
                  |           --------------------------------------------------------------- | 
                  |  | புல் - ஒலிக்குறிப்பு, அரவம் - ஒலி, குழுமும் - கூடும், உளையும் -           வருத்தும். |  | 
                  |  |  |  |