|             |                               விருப்புடன் ஏற்றவள் விடுதலை வேட்டவள்           தாமரைக் கண்ணி தமிழ்மொழி வாழ்த்திப்           பூமலர் மேனிப் பூங்கொடி தன்னொடு |             |         
                  |             |                               நின்றிடும் அல்லி நிலாமுகம் நோக்கி,           `நின்றீர் நுமக்கு நேர்ந்தது யாது?'என           நிலாமுக அல்லி நிகழ்ந்தது கூறலும், |           25 |         
                  |             |                                 |             |         
                  |             |                                          தாமரைக்கண்ணி அறிவிப்பு  |             |         
                  |             |                                 |             |         
                  |             |                               `கோமகன் ஆயிழை இவள்மேற் கொண்ட           காமந் தணிந்து கழித்தனன் அல்லன்; |             |         
                  |             |                               படிப்பகம் இதனுள் பழுதுகள் புரியின்            அடுத்தவர் ஒறுப்பர் ஆதலின் புறத்தே           வருமிடைக் காண்பான் வழியிடை ஒதுங்கி           இருத்தலுங் கூடும் இதுநீர் ஓர்ந்து           திருத்தகு நல்லீர், தெருவழிச் செல்லேல் |           30 |         
                  |             |                               பொழிலின் பின்புறம் பொருந்திய ஒருசிறு           வழியுள தவ்வழி மருங்கிற் செல்லின்           சுடுகா டொன்று தோன்றும்; ஆண்டுக்           கடுநவை உறாஅது; கலங்கேல், அந்நெறி           தாண்டிச் செல்'கெனத் தாமரைக் கண்ணி |           35 |         
                  |             |                               வேண்டி நின்றனள்; விளங்கிழை அல்லி |           40 |         
                  |             |                                 |             |         
                  |             |                                          அல்லி அஞ்சுதல்  |             |         
                  |             |                                 |             |         
                  |             |                               `பிணஞ்சுடு காட்டில் பேயினங் குழுமி           நிணங்கொளத் திரிதலால் கொடுந்துயர் நேர்ந்திடும்           யாங்ஙனம் செல்லுகேம்? யாருந் துணையிலேம்!           பாங்குற நன்னெறி பகருதி' என்றனள்; |             |         
                  |                      ---------------------------------------------------------------  |         
                  |             |                               ஒறுப்பர் - தண்டிப்பர், ஓர்ந்து - உணர்ந்து, மருங்கு - பக்கம்,           கடுநவை - கொடிய தீங்கு, உறாஅது - நிகழாது, நிணம் - கொழுப்பு, பகருதி -           சொல்லுவாய். |             |         
                  |   |             |             |