|  | 7. கடல்நகர் புக்க காதை |  | 
                  |  | கோமகன் துயிலாமை |  | 
                  |  | மலர்மலி காவுள் மங்கை பூங்கொடியின் அலர்விழி அருளும் அந்தீங் கிளவியும்
 பெறாஅது கோமகன் பெயர்ந்தோன் அக்கொடி
 மறாஅது தன்னை மணங்கொள வழிவகை
 |  | 
                  |  | உன்னி உன்னி உறங்கா திருந்தனன்; கன்னியர் நினைவுறின் கண்படை ஒல்லுமோ?
 | 5 | 
                  |  |  |  | 
                  |  | கதிரவன் எழுச்சி |  | 
                  |  |  |  | 
                  |  | இருளின் கால்சீய்த் தெழுந்தனன் பரிதி; மருள்கெட மக்கள் இமைகள் மலர்ந்தனர்;
 தெருள்நிலை கண்டனர்; தேய்ந்த உணர்வெலாம்
 |  | 
                  |  | புதுநிறை வெய்தப் பூரித் தெழுந்தனர்; கோமகன் ஒருவனோ கொடுந்துயர்ப் படுத்தும்
 காமங் கதுவக் காலையின் எழுச்சி
 அறியா னாகி அயர்ந்து கிடந்துழித்
 | 10 | 
                  |  |  |  | 
                  |  | கோமகனுக்கு அறிவுரை |  | 
                  |  |  |  | 
                  |  | தாமரைக் கண்ணி தனிமையில் அணுகி |  | 
                  |  | `நின்போற் செல்வர் நெறிதடு மாறி வன்பாய்ப் புகுதல் வரன்முறை யாமோ?
 மொழிவளம் பெறவும் மூடச் செயலால்
 இழிநிலை யுற்றோர் எழுச்சி பெறவும்
 தொண்டுகள் ஆற்றும் தூயவள், இல்லறம்
 | 15 | 
                  |  | பெண்டுகட் குரித்தெனப் பேசினும் பூங்கொடி | 20 | 
                  |           --------------------------------------------------------------- | 
                  |  | அந்தீம்கிளவி - அழகிய இனியசொல், பெறாஅது - பெறாமல், பெயர்ந்தோன்           - சென்றவன், மறாஅது - மறுக்காமல், உன்னி - நினைத்து, கண்படை - உறக்கம், கால்சீய்த்து           - அழித்து, தெருள் - தெளிவு, கதுவ - பற்ற, வன்பாய் - வன்முறையாகி. |  | 
                  |  |  |  |