| 12. மலையுறையடிகள் வாழ்த்திய காதை | 
                  | பூங்கொடி மலையுறையடிகளை அடைதல் | 
                  |  | 
                  |   | தாயும் தோழியும் தன்னுடன் தொடர ஆயும் அறிவினர் நரைமுதிர் யாக்கையர்
 சாயா நாவினர் தங்கிடன் குறுகிக்
 காயாப் பூங்கொடி கண்ணீர் மல்க
 |  | 
                  |  | மலையுறை யடிகள் மலரடி வணங்கிக் | 5 | 
                  |  |  |  | 
                  |  | பூங்கொடி நிகழ்ந்தன கூறல் |  | 
                  |  |  |  | 
                  |  | காற்றலை வீசும் கடல்நகர்ப் புக்கதூஉம், ஆங்கவள் சிலரால் அருந்துயர் பெற்றதூஉம்,
 தீங்கினை எதிர்த்துத் திருத்தி வென்றதூஉம்,
 அழுக்கிலா வாழ்க்கை ஆசான் றன்பால்
 |  | 
                  |  | திருக்குறள் கற்றுத் தெளிந்து நின்றதூஉம், | 10 | 
                  |  | பொருள்நூல் முழுதும் திரிபற உணர்ந்ததூஉம், அருள்விழி நாவலூர் அமுதத் தம்மை
 விறலுறு தமிழன் மீனவன் கையன
 பெறலருஞ் சுவடிகள் பெட்புடன் ஈந்ததூஉம்,
 |  | 
                  |  | ஏந்தல் மீனவன் இயல்பினை மலையுறை | 15 | 
                  |  | அடிகள் தம்பால் அறிகஎன் றறைந்ததூஉம் முடிய வுரைத்து முகிழ்த்தசெங் கையினள்
 படிமிசை நின்றனள் பழுதறு பூங்கொடி;
 |  | 
                  |  |  |  | 
                  |  | அடிகளார் அறவுரை |  | 
                  |  |  |  | 
                  |  | மலையுறை யடிகள் மனங்களி கூர்ந்து, |  | 
                  |  | `கலைபயில் செல்வி! கல்லா மாந்தர் | 20 | 
                  |  | நாட்டிடை மிகுதலின் நலிவுகள் மல்கின, |  | 
                  |  |  |  | 
                  |           --------------------------------------------------------------- | 
                  |  | யாக்கையர் - உடலினர், திரிபற - மயக்கம் அகல, விறலுறு - வலிமையுறும்,           பெட்புடன் - விருப்புடன், ஏந்தல் - சிறந்தோன், முகிழ்த்த - கூப்பிய, படிமிசை -           நிலத்தின்மீது, |  | 
                  |  |  |  |