பக்கம் எண் :

68.மீரா கவிதைகள்

தீயும் குளிரும்....

காயும் கனியும் - உன்
கைவிரல் மெல்லத் தொட்டால்;
தீயும் குளிரும் - உன்
தேனகைத் தூற்றல் பட்டால்!

கல்லும் உருகும் - உன்
கள்ளிசை பருக லுற்றால்;
புல்லும் மணக்கும் - உன்
பூவடி பொருந்தப் பெற்றால்!