பக்கம் எண் :

23

  பெண்மதிமாலை
  அடக்கம் பொறுமைதயை சாந்தம்-என
நடக்கும் நற்குணங்களே நாரிக்குப் பாந்தம்
  84
  மதியிது மதியிது பெண்ணே-புண்ய
வதியல்ல வோநல்ல மகராசி கண்ணே.
  கணவன் பத்தி
  புருசன்மே லொழியாத பத்தி-உள்ள
தருமதேவதைக்கல்லோ சகலமுஞ் சித்தி-மதி
  85
  கர்த்தாவே முதல்தெய்வம் மானே-பின்பு
பர்த்தாவல் லாலுண்டோ பாக்கியந்தானே-மதி
  86
  துரைமகளானாலும் பாரி-கொண்ட
உரியவனுக்கவ ளூழியக்காரி-மதி
  87
  காதலன் பக்ஷமே லக்ஷம்-குணம்
ஏதுமில்லாதவ ளெட்டி விருக்ஷம்-மதி
  88
  ஆவித்துணைவன்மேற் கோபம்-செய்யும்
பாவியைக் கண்ணாலே பார்த்தாலும் பாபம்-மதி
  89
  புருஷன் நல்வார்த்தைதட் டாதே-முட்டும்
எருதுபோல் நீசண்டைக் கிடுப்புக்கட்டாதே-மதி
  90
  தேகமுஞ் சீவனும் போலே-கொண்ட
மாகணவனுடன் வாழ்வது மேலே-மதி
  91
  செய்தநன்றி மற வாதே-பர்த்தா
வைதாலு மடித்தாலும் வாய்திறவாதே-மதி
  92
  கணவன் மேற்பகை மூர்க்கம்-செய்யில்
குணமாகப் பேசிக் குலாவுதல் மார்க்கம்-மதி
  93