பக்கம் எண் :

26

  அனைவருக்கும் உதவுக
  மதியிது மதியிது பெண்ணே-புண்ய
வதியல்ல வோநல்ல மகராசி கண்ணே.
  அனைவருக்கும் உதவுக
  ஆருக்குஞ் செய்யுப காரம்-பல
ஊருக்கும் நல்லவட் குண்டோ விகாரம்-மதி
  114
  ஈயும் பிச்சையைத் தடுக்காதே-உன்னைப்
பேயென்றொருவர் சொல்லப் பேரெடுக்காதே-மதி
  115
  துக்கமுள்ளோரை நீ தேற்று-வரும்
அக்குருடர் முடவர் பசியைநீ யாற்று-மதி
  116
  தாய்போ லெளியரைத் தாங்கு-வெறும்
வாயுற வும்மன வைரமும் நீங்கு-மதி
  117
  பிணியுடை யோரைநீ தேடு-கட்டத்
துணியுடன் காய்கறி சோறு நீபோடு-மதி
  118
  பாத்திர மறிந்திடு பிட்சை-தப்புத்
தோத்திரஞ் செய்வோரை துரத்துதல் சிட்சை-மதி
  119
  புத்தியில் லார்க்குநீ போதி-தெய்வ
பத்தியில் லார்க்குநீ படிப்பித்தல் நீதி-மதி 
  120
  நன்மையினாற்குறை யேது-பெருந்
தின்மைசெய் தோர்க்கும்நீ செய்யாதே தீது-மதி
  121
  பூமியி லேழைபோல் வேடம்-கொண்டு
சாமியே வருவர் நீ தள்ளுதல் தோடம்-மதி
  122
  நரக மோட்சங்கொண்டு வருவார்-தீனர்
தருவோர்க் கொன்றீவார் தரார்க்கொன்று தருவார்-மதி
  123