26 |
| | அனைவருக்கும் உதவுக | | மதியிது மதியிது பெண்ணே-புண்ய வதியல்ல வோநல்ல மகராசி கண்ணே. | | அனைவருக்கும் உதவுக | | ஆருக்குஞ் செய்யுப | காரம்-பல | ஊருக்கும் நல்லவட் | குண்டோ விகாரம்-மதி | | 114 | | ஈயும் பிச்சையைத் | தடுக்காதே-உன்னைப் | பேயென்றொருவர் சொல்லப் | பேரெடுக்காதே-மதி | | 115 | | துக்கமுள்ளோரை நீ | தேற்று-வரும் | அக்குருடர் முடவர் | பசியைநீ யாற்று-மதி | | 116 | | தாய்போ லெளியரைத் | தாங்கு-வெறும் | வாயுற வும்மன | வைரமும் நீங்கு-மதி | | 117 | | பிணியுடை யோரைநீ | தேடு-கட்டத் | துணியுடன் காய்கறி | சோறு நீபோடு-மதி | | 118 | | பாத்திர மறிந்திடு | பிட்சை-தப்புத் | தோத்திரஞ் செய்வோரை | துரத்துதல் சிட்சை-மதி | | 119 | | புத்தியில் லார்க்குநீ | போதி-தெய்வ | பத்தியில் லார்க்குநீ | படிப்பித்தல் நீதி-மதி | | 120 | | நன்மையினாற்குறை | யேது-பெருந் | தின்மைசெய் தோர்க்கும்நீ | செய்யாதே தீது-மதி | | 121 | | பூமியி லேழைபோல் | வேடம்-கொண்டு | சாமியே வருவர் நீ | தள்ளுதல் தோடம்-மதி | | 122 | | நரக மோட்சங்கொண்டு | வருவார்-தீனர் | தருவோர்க் கொன்றீவார் | தரார்க்கொன்று தருவார்-மதி | | 123 | | |
|
|