29 |
| | பெண்மதிமாலை | | தோலு மெலும்புஞ் | சரீரம்-இதை | மேலே மினுக்குவ | தாலென்ன சாரம்-மதி | | 146 | | செட்டிதட் டான்செக்கா | னாலே-வந்த | ஒட்டழ கன்றிஉள் | ளதுவெறுந் தோலே- | | 147 | | மதியிது மதியிது பெண்ணே-புண்ய வதியல்ல வோநல்ல மகராசி கண்ணே. | | பாவம் | | மாற்றுவாய் பாவத்தை | நீயே-நல்ல | காற்றுள்ள போதேநீ | தூற்றிக்கொள் வாயே-மதி | | 148 | | அகங்காரம் மோகம் | உலோபம்-பகை | மிகுங்கோபம் பேருண்டி | சோம்புதல் பாபம்-மதி | | 149 | | மண்ணிலுண் டார்க்கொல்லும் | நஞ்சு-நெஞ்சில் | எண்ணிடக் கொல்வது | பாவமே யஞ்சு-மதி | | 150 | | எவரையும் பாவம் | விடாதே-நிலம் | அவரை விதைக்கத் | துவரை கொடாதே-மதி | | 151 | | பாவஞ்செய் யவிரும்பில் | அம்மா-ஆதி | தேவனரு ளொழிந்து | தியங்குவாய் சும்மா-மதி | | 152 | | தீதுசெய் தால்நன்மை | தருமோ-வேம்பை | நீதான் விதைக்கக் | கரும்புவ ருமோ-மதி | | 153 | | தையலே யுலகங்கண் | ணாடி-நாம் | செய்வதை யேயது | செய்யு மே தேடி-மதி | | 154 | | வைவாரை வையுமே | யுலகம்-தீமை | செய்வாருக் கேயது | செய்யுமே கலகம்-மதி | | 155 | | |
|
|