| கீர்த்தனைகள் |
| பெண் பார்க்கத் தூதனுப்புதல் |
| உசேனிராகம்] | [ஆதிதாளம் |
| பல்லவி |
| நல்லபெண்ணைப் பார்நீ தூதா | (நல்ல) |
| அநுபல்லவி |
| அல்லடா கேளிந்தப் பூமியின் மேலே ஆயிரங் காலத்துப் பயிராகை யாலே | (நல்ல) |
| சரணங்கள் |
| அதிகபேச்சுக்காரி பெரும் வம்பி ஆயிரமானாலும் அவள்வேண்டாந் தம்பி நிதநித மூரெல்லாம் நீட்டுவாள் கம்பி நிச்சய மவளாகாள் நீயென்சொல் |
| (நல்ல) 1 |
| எழுத்துவா சகம்அறி யாதவள் மட்டி ஏதுமறி யாதவள் சுரண்டுவாள் சட்டி கழுத்திலே யவளுக்குத் தாலியைக் கட்டிக் காரிய மிலைஅது காசுக்கு நட்டி |
| (நல்ல) 2 |
| அழகுங்கு ணமுமுள்ள வள்நல்ல சோடு அழகில்லை யாயினுங் குணத்தையே தேடு பழகுநற் குணமில்லா அழகியின் வீடு பாம்பு புலிகரடி வாழ்ந்திடுங் காடு |
| (நல்ல) 3 |