| தூதன் பெண் பார்த்துவந்து சொல்லுதல் |
| சகல காரியங்களுந் தெரிந்தவள் சலாக்யம் தரித்திர தசையிலு மவள்பெரும் பாக்கியம் இகபர மிரண்டுக்கு மவள்நல்ல யோக்கியம் என்று சொன்னான்வேத நாயகன் வாக்யம் |
| (நல்ல) 10 |
| தூதன் பெண் பார்த்துவந்து சொல்லுதல் |
| சௌராஷ்டிரராகம்] | [அடதாளசாப்பு |
| பல்லவி |
| பஞ்சவர்ணக் கிளிபோ லொருபெண்ணை நான் பார்த்து வந்தேன் சுவாமி |
| அநுபல்லவி |
| கொஞ்சமுஞ் சந்தேக மில்லாமலே அந்தக் கோல மயிலைநீர் கொள்ளும்-அநு கூலம் வந்ததென்று துள்ளும்-நல்ல காலங் கவலையைத் தள்ளும் | |
(பஞ்ச) |
| சரணங்கள் |
| பூரணச் சந்திரன் போலுமு கத்துக்குப் பூமியி லுண்டோச மானம்-தெய்வப் பூவையர் சுந்தரம் வேண்டில் அவளிடம் போய்வாங்க வேண்டுமே தானம்-அந்த நாரிகண் வாய்செவி மூக்குக்கு வமையை நாட்டுவ துமதி யீனம்-அவள் நடையழ குக்குஞ்ச டையழ குக்குமே நானென்சொல் வேனுப மானம்-அந்த மானின்சொல் லோதேவ கானம்-இடை தானுண்டென் பதனு மானம்-நாறு மீனங்கண் ணெனிலவ மானம் |
| (பஞ்ச) 1 |