பக்கம் எண் :

38

  தங்களைப் படிப்பிக்கும்படி பெண்கள் வேண்டுதல்
  சுந்தரி சீலம்விஸ் தாரம்-உமக்
கந்தமின் னேநல்ல தாரம்
  (பஞ்ச) 9
  பாயும்ப டுக்கையு மாகநோய் கொண்டாலும்
பர்த்தாவே லைக்குப்பின் வாங்காள்-உந்தம்
பக்ஷமொன் றேகோடி லக்ஷமென் றேயெண்ணிப்
பலதுன்பம் வந்தாலும் ஏங்காள்-பெற்ற
தாயும், பிதாவும் நிகர்வேத நாயகன்
தாமரைப் பாதத்தை நீங்காள்-நல்ல
சத்யநி ரந்தரை; புத்தியின் மந்திரி:
சட்டக் குடித்தனப் பாங்காள்-வேலை
முட்ட முடியுமுன் றூங்காள்-என்றுங்
கெட்டவ ளென்றுபேர் வாங்காள்-உமக்
கிட்டமுள் ளாள்; பழி யோங்காள்
  (பஞ்ச) 10
 

தங்களைப் படிப்பிக்கும்படி பெண்கள் வேண்டுதல்

  ராகம் - நாதநாமக்கிரியை] [தாளம் - ஆதி
  பல்லவி
  வித்தையைப் படிப்பியுங்கள்-தயைசெய்து
வித்தையைப் படிப்பியுங்கள்.
  அநுபல்லவி
  உத்தம வான்களே சத்தியபி மான்களே
உங்கட்குக் கண்களான பெண்களா மெங்களுக்கு
  (வித்தை)
  சரணங்கள்
  திருத்தமா வேலைகளெல் லாமுடிப்போம்-வேலை
தீர்ந்தபின் புத்தகங்க ளேபடிப்போம்