வழுவெனக் கண்டது மாற்றினன். அநேகவந்தனம் வந்தனம்! ஆயினு மொருசொற்சிந்தையிற் சேர்த்தெனைத் தெருட்டிட வேண்டும்.
வேற்றுமை யுருவாய் விளங்கிய காலங்காற்றினுங் கடுகிய கடுநடை யுடையதன்றோ? அதிலகப் பட்டார் முந்திச்சென்றா னின்றார்! சிறிதுசிந் தித்துநிற்பரேற் பெரிதும் பிற்பட் டொழிவர்.
ஆதலா லடிகாள் பூதலத் துயர்ந்தமேதையின் மிகுத்த மானிடர்க் கரசராய்வந்தவர், தந்தமக் குற்ற மதித்திறமெட்டிய மட்டுங் குற்றம் விடுத்துக்கால கதிக்கனு கூலமாய் நவீன
சீர்பல திருத்தி யோரியல் புதிதாநாட்டித் தமது நாட்டுளோர் சுகம்பாராட்டில ரேலவ ராண்டநாட் கெல்லைகாட்டுமோ கொடிய காலப் கரப்பே!இவ்வழி தனக்கெனத் துணிந்ததோ ரியல்பே
யவ்வர சனுக்காம் யாக்கை. அஃதின்அழிவே யவன தொழிவாம். அதனால்எல்லா மறிந்த விறைவ! இவ் விடத்தியான்பல்லா யிரநாட் பரிவுட னுழைத்தேஅமைத்தவிப் புரியுஞ் சமைத்தவிவ் வரணும்
நன்றே யாயினு மாகுக : அன்றிப்பொன்றினும் பொன்றுக : பொறித்தவென் னரசியல்மற்றவை தம்மொடு மாண்டிடும் : மாண்டபின்அற்றதோர் கவந்தம் அமர்க்களத் தாடு்ம்பெற்றிபோல் மூச்செறி பிணமா யானும்
நடித்தலோ வுன்றிரு வடித்தா மரையைப்பிடித்ததற் கழகாம் பேசாய் விடுத்தே!
எடுத்ததன் முயற்சி யாதே யாகுக!முடித்திடு முன்ன ரடுத்ததன் மதியாற்றீங்கெனத் தேர்ந்திடி னாங்கவற் றுட்பின்