| 25. | மனோகர மாகய சினகர மொன்றில் |
| | உலகுள பொருளெலா முய்ப்பினும் பின்னும் |
| | நிலைபெற நிரம்பா தவர்க்குள வாசை. |
| | வசிட்டர் முன்னர் வாளாப் புகைத்தனர் |
| | முசிப்பிலா மன்னர் திரவிய முற்றும். |
| 30. | கௌசிக னிரக்கவோர் மௌலி வேந்தன் |
| | பட்டபா டுலகில் யாவரே பட்டுளர்? |
| | சிட்ட முனிவாக்ள் செயலாற் பலகால் |
| | புரந்தரன் றனதுருக் கரந்து திரிந்தனன். |
| | முனிவரே யாயினும் மனிதரே மீண்டும். |
| 35. | இச்சை யற்றவ ரிச்சகத்து யாவர்? |
| | |
| ஜீவ. | | ஒவ்வும் ! ஒவ்வுநீ யுரைத்தது முற்றும். |
| | |
| நாராயணன். | | ஐயோ ! பாவி ! அருந்தவ முனிவரைப் |
| (தனதுள்) | | பொய்ய னாக்குவன், புரவல னோவெனில் |
| | எடுப்பார் கைப்பிள்ளை. தடுப்பார் யாரோ? |
| | (நேரிசை வெண்பா) |
| நாரா, | | கொல்லா யெனப் பகைஞர் கோற்றொடியார் கும்பிட்டுப் |
| (அரசனை நோக்கி) | | பல்லிளிக்கக் கண்சிவக்கும் பார்த்திபனே - பொல்லா |
| | வெறுமெலும்பை நாய்கௌவும் வேளைநீ செல்ல |
| | வுறுமுவதென் நீயே யுரை. |
| | (சேவகன் வர) |
| | (நிலைமண்டில வாசிரியப்பா தொடர்ச்சி) |
| சேவகன். | 40. | மன்னிய கலைதேர் சகடர் வந்தனர். |
| | |
| ஜீவ. | | வரச்சொல் சேவக ! |
(நாராயணனை நோக்கி) | | உரைத்தநின் னுவமையிற் |
| | சற்றே குற்ற முள்ளது நாரணா ! |
| | |
| குடில, (தனதுள்) | | அரசன் மாறாய்ப் பொருள்கிர கித்தனன். |
| (அரசனை நோக்கி) | | வெற்றுரை வீணாய் விளம்பினன். அதனிற் |