பக்கம் எண் :

106மனோஹரன்[அங்கம்-3

ரங்கி, என்னை மன்னித்ததாக ஒரு வார்த்தையாயினும்
எனக்கு நேராகக் கூறலாகாதா? மங்கையர்க் கரசியே ! 
இன்னும் நான் என்னசொல்வது? நான் உனது புருஷனா
தல்பற்றி, உனது சீர் தங்கிய பாதங்களில் வீழ்ந்து
வேண்டாத குறையொன்று தான்-அதுவும் செய்ய
வேண்டுமென்றால் செய்கிறேன்.

ப. விஜயா, மஹாராஜா இக் காரியம் செய்தல் தவறெனச்
சொல்லித் தடுத்துவிட்டு வா.

வி. மாமா, அப்படி செய்ய லாகாதென்று மாமி தடுக்கச்
சொன்னார்கள்.

பு. விஜயா, உன் புருஷனை நான் தூஷித்ததெல்லாம் நீயும்
மன்னிப்பாய் ! 

வி. சரிதான் மாமா.

பு. நீ கூறியபடி உனது மாமியும் என் மனங்குளிர அப்
படியே கூறலாகாதா?

ப. ஒரு அற்ப வேசியினுடைய மன்னிப்பு அவருக் கென்
னத்திற்கு?

பு. பத்மாவதி ! நான் இதுவரையில் என் துக்கத்தைப்
பொறுத்துப்பார்த்தேன், இனி என்னால் பொறுக்க
முடியாது !  பத்மாவதி, இதோ, கடைசி வார்த்தை
சொல்லுகிறேன். நான் செய்த குற்றங்களை யெல்லாம்
நீ மன்னித்ததாக இப்பொழுது கூறாவிட்டால் இதோ
உன் முன்பாகவே எனதுயிரை இவ்வுடைவாளுக்கு
இரையாக்குவேன். என்ன சொல்லுகிறாய்?-இனி நான்
தாமதியேன்.-பத்மாவதி !  இதோ நீயே என்னைக் கொல்
கிறாய் ! 

ப. பிராணநாதா ! -  மஹாராஜா !  வேண்டாம் !  வேண்டாம் ! 
பொறும் !   நான் உம்மை மன்னித்தேன் !  மன்னித்தேன் !