பக்கம் எண் :

120மனோஹரன்[அங்கம்-5

இரண்டாவது காட்சி.

இடம்-யுத்தகளம்,       காலம்-பகல்.

சோழ சைனியங்கள் முறியடிக்கப்பட்டு ஓடுகின்றன.

மற்றொரு புறமாக புருஷோத்தமராஜன் பாண்டிய சைனியங்களால்

துரத்தப்பட்டு ஓடிவருகிறார்.

பு. அடே !  வீரர்களானால் ஒருவன் ஒருவனாகச் சண்டை
செய்யுங்கள் ! 

பா.சை. அடே !  இவரெ அல்லாருமா சேர்ந்து கொண்ணுட்டா
தாண்டா சரி !       [புருஷோத்தம ராஜன் பாண்டியர்
                     களால் எதிர்க்கப்பட்டு தன்னாலி
                     யன்ற அளவு யுத்தம் புரிந்தும்
                     கடைசியில் காலில் வெட்டப்
                     படுகிறார். ] 

பு. மனோஹரா ! மனோஹரா !       [ கீழே விழுகிறார். ] 

மாறுவேஷத்தில் மனோஹரன் பௌத்தாயனன், சத்தியசீலர்,

ராஜப்பிரியன், சைனியங்களோடு விரைந்து வருகிறார்கள்.

ம.

இதோ ! வந்தேன் !  [ புருஷோத்தம ராஜனை எதிர்த்த
                   வரை வெட்டித் தள்ளி அவரைக்
                   காப்பாற்றுகிறான். பாண்டிய
                   சைனியங்கள் ஓடிப் போகின்றன. ]


அப்படியே இரண்டு பெயராகப் பாசறைக்கு எடுத்துச்
செல்லுங்கள் சீக்கிரம் ! 

பௌ. இன்னும் உயிரிருக்கிறது !  ஆயினும் மூர்ச்சையா யிருக்
கிறார் !  காயம்பட்டிருக்கிறது !  ஜாக்கிரதை ! ஜாக்கிரதை !
                  [ சத்தியசீலரும் ராஜப் பிரியனும்
                      மூர்ச்சையா இருக்கும் அரசனை
                      அப்படியே தூக்கிக் கொண்டு
                      போகிறார்கள். ] 

ம. சோழர்களே !  வாருங்கள் !  வாருங்கள் !  ஓடுகிறார்கள் 
பகைவர்கள் !