| கடந்தடு வாய்வாள் இளம்பல் கோசர் இயனெறி மரபில்நின் வாய்மொழி கேட்ப ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... மகிழ்ந்தினி துறைமதி பெரும" | (மதுரைக். 771-79) |
என்று பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாடப்படுவதால், பாண்டி நாட்டிலும், |
| '... ... ... ... ... ... ... செல்லூர்க் குணாஅது பெருங்கடல் முழக்கிற் றாகி யாணர் இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர் கடுங்கட் கோசர் நியம மாயினும்" | (அகம். 90) |
என்பதால் சோழநாட்டிலும், |
| "பல்லார்க்கும் ஈயும் பரிசிற் கொடைத்தடக்கை மல்லார் மணிவரைத்தோள் வண்கோசன்-மல்லலந்தார் செஞ்சொல் செருந்தைதன் தென்னுறந்தை யென்றாளும் வஞ்சிக் கொடிமருங்குல் வந்து" | |
(யாப்பருங்கல விருத்தி. ஒழிபியல்) |
என்னும் பழம் பாட்டால், உறையூரிலும், |
| "கொங்கிளங் கோசர் தங்கள்நாட் டகத்து" | |
(சிலப். உரைபெறுகட்டுரை) |
என்பதால், கொங்கு நாட்டிலும், |
| "கோசர் துளுநாட்டன்ன" | (அகம். 15) |
என்பதால், துளுநாட்டிலும், கோசர் வதிந்திருந்தமை புலனாம். |
கொங்குநாடு பிற்காலத்தில் மூவேந்தரிடையும் பிற சிற்றரசரிடையும் அடிக்கடி கைமாறி வந்திருப்பினும், முற்காலத்தில் சேரர்க்கே உரியதா யிருந்திருத்தல் வேண்டும் என்பது, |
| "சேரர் கொங்குவை காவூர்ந னாடதில்" | |
என்று அருணகிரிநாதர் பாடியிருப்பதாலும், தகடூராண்ட அதிகமான்குடி வரலாற்றாலும், பிறவற்றாலும், அறியப்படும். |
கடைக்கழகக் காலத்தில், முத்தமிழ்நாட்டிலும் ஆங்காங்கிருந்த குறுநில மன்னர் தத்தம் வலிமிக்க காலத்து, தத்தம் வேந்தர் தலைமை யினின்று திறம்பியதொடு அவர் நாட்டையும் கைப்பற்றினர் என்பதற்கு. |
| "வாய்மொழி நிலைஇய சேண்விளங்கு நல்லிசை வளங்கெழு கோசர் விளங்குபடை நூறி நிலங்கொள வெஃகிய பொலம்பூட் கிள்ளி" | (அகம். 205) |
| 'தித்தன் உறந்தை" | (அகம். 122) |
என்பன சான்றாம். இம் முறையே, கொங்கும் துளுவும் கோசர் வயிற்பட் டிருத்தல் வேண்டும். இளங்கோவடிகள் "குடகக் கொங்கர்" என வரந்தரு |