கி.மு. 3000 ஆண்டுகட்குமுன் மேனாடுகளில் துணி நெய்யப்பட வில்லை யென்றும், இந்தியாவினின்றே ஏற்றுமதி யாயிற்றென்றும், வயவர் சான் மார்சல் (Sir John Marshall) கூறுகின்றார். இதற்குச் சான்றாக, பருத்தியும் பஞ்சும் துணியும் பற்றிய தமிழ்ப் பெயர்கள் இன்றும் மேனாடுகளில் வழங்குகின்றன. |
பன்னல் - பருத்தி. |
L. Punnus - Cotton. |
It. Panno - Cloth. |
கொட்டை, கொட்டான். - பஞ்சு. |
Ar. Qutun, It. Cotone. Fr. Coton, E. Cotton. |
| பருத்திப் பஞ்சைக் கொட்டையென்றும் கொட்டானென்றும் கூறுவது நெல்லை நாட்டு வழக்கு. |
E. Calico - Cotton Cloth. |
3. பழங் கன்றிப்போதல். |
மலையாள (பழஞ்சேர) நாட்டுத் துறைமுகங்களுள் ஒன்றான கோழிக்கோட்டிலிருந்து ஏற்றுமதியான துணி ஆங்கிலத்தில் 'காலிக்கோ' எனப்பட்டது. 'கோழிக்கோடு' இன்று கள்ளிக்கோட்டை என மருவி வழங்கு கின்றது. இம் மரூஉ. (Calicut என்னும்) ஆங்கிலப் பெயர் வடிவைத் தழுவியது: |
பண்டை மேனாட்டார் ஆடையைச் சுற்றிக் கட்டினரே யன்றித் தற்றுடுத்தின தில்லை. கி.மு. மூவாயிரம் ஆண்டுகட்குப்பின் இந்தியாவிற் புகுந்த வேத ஆரியர், ஆடுமாடு மேய்க்கும் முல்லை நாகரிகத்தையே அடைந்திருந்ததனால், அவரும் மெல்லாடையைத் தற்றுடுத்தியது மில்லை; தமிழர்போற் கடுமையாய்ப் பலதுறையில் உழைத்தது மில்லை. |
ஆகவே, தாறுபாய்ச்சிக் கட்டுதல் தொன்றுதொட்ட தமிழர் வழக்கே யென்றும், அதனைக் குறிக்குஞ் சொல்லும் தூயதமிழ்ச் சொல்லேயென்றும், பிராமணர் கட்டும் பஞ்சகச்சமும் தமிழர் தற்றுடுத்தலின் வேறுபாடே யென்றும், தெற்றெனத் தெரிந்துகொள்க. |
- தென்றல் |