பக்கம் எண் :

303ஆய்வு

     “திருவாய்மொழி, திருப்பாட்டு, திருவாசகம் என்கின்ற கொச்சக ஒரு
போகுகளில் காண்க (செய் - 149)

     திருவெம்பாவை எட்டடியான் வந்து, இவ்வாறு இற்றன (செய் - 149).

     திருவுலாப் (ஆதி உலா) புறத்துள்ளும் வாமான ஈசன் வரும் என
முடித்து” (செய் - 160).

     பிற்காலத்தில் தோன்றிய சிற்றிலக்கியங்களாகிய பிள்ளைத் தமிழ்,
உலாச்செய்யுள், கலம்பகம் ஆகியவற்றை நன்கு அறிந்துள்ளார் (புறத் - 29,
செய் - 239).

வடமொழிப் புலமையும் சமயநூல் அறிவும்

    நச்சினார்க்கினியர் வடமொழியில் உள்ள கீதையைத் தம் உரையில்,

     “கண்ணன் எப்பொருளும் தானாய் இருக்கின்ற படியைக் காட்டி
ஸ்ரீகீதை அருளிச் செய்து எல்லாரையும் போதித்தாற் போல’ (மதுரைக் - 763)
என்று குறிப்பிடுகின்றார்.

     வேள்வி செய்வதற்குரிய முறை, பொருள், சடங்கு ஆகியவற்றைச் சீவக
சிந்தாமணியில் இலக்கணையார் இலம்பகத்தில் (2462, - 68) தெளிவாக
விளக்குகின்றார்.

     பத்துப்பாட்டில் (முருகு-180) முத்தீ என்பதனை ‘ஆகவனீயம்
தக்கிணாக்கினி, காருகபத்தியம்’ என்று கூறுகின்றார்.

     நான்மறை, ஆறங்கம் எவை எவை என்பதைப் பல இடங்களில்
தெளிவுபடுத்துகின்றார், (தொல்-பாயிரம்; கலி-1. புறத்-20.)

     அந்தணர் முதலிய சொற்களுக்கு, பொருள் பின் வருமாறு
உரைக்கின்றார்:

     “அந்தத்தை அணவுவார் அந்தணர்; என்றது வேதாந்தத்தையே
நோக்குவார் (முருகு-96, கலித்-1).

     “வேதாந்தத்தை எக்காலமும் பார்ப்பார் (மதுரை-474).

     இருபிறப்பாளர்-உபநயனத்துக்கு முன்பு ஒரு பிறப்பும், பின்பு ஒரு
பிறப்புமாகிய இருபிறப்பினையும் உடைய அந்தணர் (முருகு-182).

     கந்தழி-ஒரு பற்றுக்கோடின்றி அருவாகித் தானே நிற்கும் தத்துவம்
கடந்த பொருள்.

     நச்சினார்க்கினியர் தம் சமயப்புலமையும் கொள்கையும் வெளிப்படும்
வகையில் உரை எழுதும் இடங்களில் சில:

     உலகம் உவப்ப - சீவான்மாக்கள் உவப்ப (முருகு-1)