பக்கம் எண் :

முதல் அதிர்சி115

Untitled Document
போய் வந்துகொண்டிருந்ததால்அதிகப் பணம்மிச்சமாயிற்று.
மேலும்,பம்பாயில் என் நண்பர்களில் பலர்,வழக்கமாக
நோயுற்றுவந்தபோது,நான்ஒருதடவையேனும்
நோய்வாய்ப்பட்டதில்லை. நான் பணம் சம்பாதிக்கஆரம்பித்துவிட்ட
பிறகும்கூட,காரியாலயத்திற்கு நடந்தேபோய்த்திரும்பும்
வழக்கத்தைமாத்திரம் விடவே இல்லை.அப்பழக்கத்தின்
நன்மைகளை நான் இன்னும் அனுபவித்து வருகிறேன்.

4. முதல் அதிர்ச்சி

ஏமாற்றத்துடன் பம்பாயிலிருந்து புறப்பட்டேன். ராஜ்கோட்டிற்குப்
போய் அங்கே என் அலுவலகத்தை அமைத்துக் கொண்டேன்.அங்கே
என் தொழில் கொஞ்சம்நன்றாகவே நடந்து வந்தது. மனுக்களும்,
விண்ணப்பங்களும்தயாரித்துக் கொடுப்பதில் சராசரி மாதத்திற்கு
ரூ. 300 எனக்குக்கிடைத்து வந்தது.இதற்கு என்சொந்தத்
திறமையைவிடஎன் சகோதரரின் செல்வாக்குத்தான் முக்கியமான
காரணம். அவருடையகூட்டாளியான வக்கீலுக்குத் தொழில் நன்றாக
நடந்து வந்தது.உண்மையில் முக்கியமானவையாக இருக்கும், அல்லது
முக்கியமானவை என்றுஅவருக்குத் தோன்றும்மனுக்களைத்
தயாரிக்கும்வேலையை,அவர்,பெரிய பாரிஸ்டர்களிடம்
கொடுத்துவிடுவார். அவரிடம் வரும்ஏழைக் கட்சிக்காரர்களுக்காகத்
தயாரிக்க வேண்டிய விண்ணப்பங்களே என் பங்கில் விழுந்தன.

வழக்குப் பிடித்துத்தருகிறவர்களுக்குத்தரகுப் பணம்
கொடுப்பதில்லை என்ற கொள்கையைப் பம்பாயில் நான் கண்டிப்பாகக்
கடைப்பிடித்து வந்தேன்.ஆனால், அந்தக் கொள்கையை இப்போது
நான்விட்டுக்கொடுக்கவேண்டியதாயிற்று என்பதை நான்
ஒப்புக்கொள்ளவேண்டும்.இந்த இரண்டுநிலைமைகளுக்கும்
வித்தியாசம் உண்டு என்றார்கள். பம்பாயில், தரகுப் பணம்,வழக்குத்
தரகர்களுக்குக் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால் இங்கோ, நம்மை
அமர்த்தும்வக்கீலுக்குக் கொடுக்க வேண்டும். அதோடு பம்பாயைப்
போன்றே,இங்கும் ஒருவர் கூடப்பாக்கியில்லாமல் எல்லாப்
பாரிஸ்டர்களும்தரகுகொடுக்கிறார்கள்என்றும் எனக்குச்
சொன்னார்கள்.என் சகோதரர் கூறிய வாதத்திற்கு என்னால் பதில்
சொல்ல முடியவில்லை. அவர் சொன்னார்:“நான் மற்றொரு வக்கீலுடன்
கூட்டாளியாக இருக்கிறேன்.உன்னால் செய்ய முடியும் வேலைகள்
எல்லாவற்றையும் உனக்கே கொடுத்துவிட வேண்டும் என்றுதான் நான்
விரும்புவேன். அப்படியிருக்க,என் கூட்டாளிக்குத் தரகுத் தொகை
கொடுக்கநீ மறுத்துவிட்டால்,நிச்சயமாக என் நிலைமை
சங்கடமானதாகிவிடும். நீயும் நானும் ஒரே குடும்பமாகஇருக்கிறோம்.
ஆகையால், உனக்குக் கிடைக்கும்