பக்கம் எண் :

கிறிஸ்தவர்களுடன் தொடர்பு149

Untitled Document
தீவிர மதப்பற்றுள்ள கிறிஸ்தவர்கள் என்று அவர் கருதிய நண்பர்கள்
பலரையும் அவர் எனக்கு அறிமுகம்    செய்து வைத்தார். இவ்விதம்
அறிமுகம் செய்து      வைக்கப்பட்டவர்களில் பிளிமத் சகோதரர்கள்
என்ற கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்த குடும்பமும் ஒன்று.

     ஸ்ரீ கோட்ஸின் மூலம் எனக்குப்     பழக்கமானவர்களில் பலர்
மிகவும் நல்லவர்கள்.     அவர்களில் அநேகர் கடவுளுக்குப் பயந்து
நடப்பவர்கள் என்பதைக்             கண்டேன். ஆனால், பிளிமத்
குடும்பத்தினருடன் எனக்குப் பழக்கம்       ஏற்பட்டபோது, பிளிமத்
சகோதரர்களில் ஒருவர், என்னிடம் ஒரு வாதத்தை   எடுத்துக் கூறத்
தொடங்கினார். அதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.  அவர்
கூறியதாவது:

     “எங்கள் மதத்தின் மேன்மையை          உங்களால் புரிந்து
கொள்ளமுடியவில்லை.  நீங்கள் செய்துவிட்ட தவறுகளைக் குறித்தே
உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு  கணத்திலும் நினைத்து வருந்திக்
கொண்டும், எப்பொழுதும்      அவைகளைத் திருத்திக் கொண்டும்,
அவற்றிற்காகப்          பிராயச்சித்தம் செய்து கொண்டும் நீங்கள்
இருப்பதாகச் சொல்வதில் இருந்தே          அது தெரிகிறது. இந்த
இடையறாத      வினைச் சுழல் உங்களுக்கு எவ்விதம் விமோசனம்
அளிக்க முடியும்? உங்களுக்கு மனச்சாந்தியே         இராது. நாம்
எல்லோரும் பாவிகளே என்பதை   ஒப்புக்கொள்ளுகிறீர்கள். எங்கள்
நம்பிக்கை எவ்வளவு பரிபூரணமானது       என்பதை இப்பொழுது
பாருங்கள்.    சீர்திருந்துவதற்கும், பிராயச்சித்தம் பெறுவதற்கும் நாம்
செய்யும் முயற்சிகளெல்லாம் வீணானவை    என்றாலும் நமக்கு கதி
மோட்சம் ஏற்பட வேண்டும்    பாவத்தின் சுமையை நாம் எவ்விதம்
தாங்க முடியும்? அப் பளுவை                நாம் ஏசுநாதர் மீது
போட்டுவிடத்தான் முடியும். அவர் ஒருவரே பாவமற்ற திருக்குமாரர்.
‘என்னை நம்புகிறவர் யாரோ        அவரே நித்தியமான வாழ்வை
அடைவார்’ என்பது அவருடைய திருவாக்கு கடவுளின்  எல்லையற்ற
கருணை இதில்தான் இருக்கிறது. நமது      பாவங்களுக்கு ஏசுநாதர்
பிராயச்சித்தத்தைத்     தேடுகிறார் என்பதை நாம் நம்புவதால், நமது
பாவங்கள் நம்மைக்           கட்டுப்படுத்துவதில்லை நாம் பாவஞ்
செய்யாதிருக்க முடியாது. பாவமே செய்யாமல்     இவ்வுலகில் உயிர்
வாழ்வது இயலாது. ஆகையால்     நமது பாவங்களுக்காக ஏசுநாதர்
துன்பங்களை அனுபவித்தார்;      மனித     வர்க்கத்தின் எல்லாப்
பாவங்களுக்கும் அவரே பிராயச்சித்தம் தேடினார்.   அவர் வழங்கும்
இந்த மகத்தான விமோசனத்தை ஒப்புக்கொள்கிறவர்கள்   மாத்திரமே
நிரந்தரமான மனச் சாந்தியைப் பெறமுடியும். உங்களுடைய   வாழ்வு
எவ்வளவு அமைதியற்றதாக இருக்கிறது என்பதையும்,    எங்களுக்கு
அமைதி எவ்வளவு   நிச்சயமாக இருக்கிறது என்பதையும் சிந்தித்துப்