பக்கம் எண் :

மூன்று பவுன் வரி 187

Untitled Document
வந்தார்.   என் அனுபவத்தில்   இவ்விதம் நிகழ்ந்தது இதுவே முதல்
தடவை.         அவமானத்தினால் என் மனம் குன்றியது. தலையில்
முண்டாசைக்          கட்டும்படி  அவரிடம் கூறினேன். கொஞ்சம்
தயங்கிக்கொண்டே அவர் கட்டினார். என்றாலும், அவருக்கு ஏற்பட்ட
மகிழ்ச்சியை அவர் முகத்தில் நான் காணமுடிந்தது.

     மனிதர்கள் தங்களுடைய    சகோதர மனிதர்களை அவமானப்
படுத்துவதன்         மூலம் தாங்கள் கௌரவிக்கப்படுவதாக எப்படி
நினைக்கிறார்கள் என்பது,    எனக்கு என்றுமே   புரியாத மர்மமாக
இருந்துவருகிறது.

21 மூன்று பவுன் வரி

     பாலசுந்தரத்தின்     வழக்கினால்  ஒப்பந்தத் தொழிலாளருடன்
எனக்குத் தொடர்பு ஏற்பட்டதானாலும்,அவர்களுடைய நிலைமையைக்
குறித்து ஆழ்ந்து ஆராயும்படி   என்னைத் தூண்டியது, கடுமையான
விசேஷ வரியை   அவர்கள் மீது     சுமத்துவதற்குச் செய்யப்பட்ட
முயற்சியே ஆகும்.

     அதே 1894ஆம் ஆண்டில்     நேட்டால் அரசாங்கம் இந்திய
ஒப்பந்தத் தொழிலாளருக்கு      ஆண்டுக்கு 25 பவுன் வரி விதிக்க
முற்பட்டது.      இந்த  யோசனையைக்  கேட்டுத் திகைப்புற்றேன்.
இவ்விஷயத்தைக் குறித்து விவாதிக்க,     இதைக் காங்கிரஸின் முன்
கொண்டு வந்தேன். அவசியமான எதிர்ப்புக்கு ஏற்பாடு செய்வதென்று
உடனே காங்கிரஸ் தீர்மானித்தது.

     இந்த   வரியின்    பூர்வோத்தரத்தைக் குறித்தும்  சுருக்கமாக
முதலில்      நான் விளக்க வேண்டும்.   1860-ம் ஆண்டு வாக்கில்
நேட்டாலில் இருந்த   ஐரோப்பியர்கள்,  அங்கே கரும்பு சாகுபடிக்கு
நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று கண்டனர்.   இதற்குத் தொழிலாளர்
தேவை என்றும் உணர்ந்தார்கள். இத்தகைய   வேலைக்கு நேட்டால்
ஜூலுக்கள் பயன்படமாட்டார்கள்.  கரும்புச் சாகுபடிக்கும், சர்க்கரை
தயாரிப்பதற்கும்    வெளியில் இருந்து    தொழிலாளரைக் கொண்டு
வந்தாலன்றிச்         சாத்தியமில்லை.   அதன்பேரில்   நேட்டால்
அரசாங்கத்திற்கும், இந்திய அரசாங்கத்திற்கும் கடிதப் போக்குவரத்து
நடந்தது. இந்தியத் தொழிலாளரைத் திரட்டிக் கொண்டுவர, நேட்டால்
அரசாங்கம்          அனுமதி பெற்றது.   இவ்விதம் திரட்டப்படும்
தொழிலாளர்கள், நேட்டாலில்   ஐந்தாண்டுகள் வேலை  செய்வதாக
ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.   இந்த ஐந்து வருட காலம்
முடிந்ததும்     அங்கேயே குடியேறி விடலாம்.  முழு உரிமையுடன்
அவர்கள் நிலத்தையும்      வைத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு
இவ்விதமெல்லாம்           ஆசை காட்டப்பட்டது.    ஏனெனில்
இத்தொழிலாளரின் ஒப்பந்தம் தீர்ந்த பிறகும் இவர்களின்