பக்கம் எண் :

இந்தியன் ஒப்பீனியன் 341

Untitled Document
13 இந்தியன் ஒப்பீனியன்

     மற்றும் பல ஐரோப்பியருடனும்          ஏற்பட்ட நெருங்கிய
தொடர்பைக் குறித்துச் சொல்லுவதற்கு    முன்னால் இரண்டு மூன்று
முக்கியமான விஷயங்களை நான் குறிப்பிட   வேண்டும். என்றாலும்,
ஒருவருடன்            ஏற்பட்ட தொடர்பைக் குறித்து இப்போதே
சொல்லிவிடவேண்டும். என் வேலைக்குக் குமாரி டிக்கை நியமித்தது
மாத்திரம்          போதவில்லை. எனக்கு மேற் கொண்டும் உதவி
தேவையாயிற்று.               முந்திய அத்தியாயங்களில் ஸ்ரீ ரிச்
என்பவரைப்பற்றிக்        கூறியிருக்கிறேன்.     அவரை எனக்கு
நன்றாகத் தெரியும். ஒரு வர்த்தக ஸ்தாபனத்தில் அவர் நிர்வாகியாக
இருந்தார். அந்த வர்த்தக ஸ்தாபனத்தை    விட்டு விட்டு என் கீழ்
வக்கீல் வேலைக்குப்      பயிற்சி பெறுமாறு யோசனை கூறினேன்.
அதன்படி அவர் செய்து எனக்கு இருந்த       வேலைப்பளுவைப்
பெரிதும் குறைத்தார்.

     அந்தச் சமயம் ஸ்ரீ மதன்ஜித்,      ‘இந்தியன் ஒப்பீனியனை’
ஆரம்பிக்கும் திட்டத்துடன்               என்னிடம் வந்து என்
ஆலோசனையைக் கேட்டார். அப்பொழுதே           அவர் ஓர்
அச்சகத்தை நடத்திக் கொண்டிருந்தார். அவருடைய    திட்டத்தை
அங்கீகரித்தேன். இப்பத்திரிக்கை 1904-இல்    ஆரம்பமாயிற்று. ஸ்ரீ
மன்சுக்லால் நாஸர் அதன்        முதல் ஆசிரியரானார். எல்லாச்
சமயங்களிலும் நானே       அப்பத்திரிகையை நடத்தி வரவேண்டி
வந்ததால் வேலை முழுவதும்       என் தலையிலேயே விழுந்தது.
அவ்வேலையைச்    செய்து கொண்டு போக ஸ்ரீ மன்சுக்லாலினால்
முடியாது என்பதல்ல.     இந்தியாவில் இருந்த போது ஓரளவுக்குப்
பத்திரிக்கையாளராக அவர் அனுபவம் பெற்றிருக்கிறார்.   ஆனால்,
நான் அங்கே இருக்கும் போது      சிக்கலான தென்னாப்பிரிக்கப்
பிரச்னைகளைக் குறித்து          அவர் எழுத முற்படுவதில்லை.
என்னுடைய விருப்பு,        வெறுப்பற்ற தன்மையில் அவருக்குப்
பரிபூரண நம்பிக்கை உண்டு. ஆகவே, தலையங்கங்களை  எழுதும்
பொறுப்பை அவர் என்மீது போட்டு விட்டார்.    இன்றளவும் அது
வாரப்    பத்திரிகையாகவே இருந்து வருகிறது. ஆரம்பத்தில் அது
குஜராத்தி, ஹிந்தி, தமிழ், ஆங்கிலம்         ஆகிய மொழிகளில்
பிரசுரமாயிற்று. ஆனால், ஹிந்திப் பகுதியும்       தமிழ்ப் பகுதியும்
பெயரளவுக்குத்தான் இருந்தனவே ஒழிய, எந்த நோக்கத்தின் பேரில்
அவை ஆரம்பிக்கப்பட்டனவோ அதை அவை நிறைவேற்றவில்லை.
ஆகையால்,        அந்தப் பகுதிகளைத் தொடர்ந்து வெளியிட்டுக்
கொண்டிருப்பது          ஓரளவுக்கு ஏமாற்றுவதாகும் என்று நான்
உணர்ந்ததால் அவற்றை நிறுத்தி விட்டேன்.

     இந்தப்      பத்திரிகைக்கு      நான் பணம் எதுவும் போட
வேண்டிவரும்