பக்கம் எண் :

510சத்திய சோதனை

Untitled Document
     கமிட்டி, ஒருமனதான ஓர் அறிக்கையை       வெளியிடும்படி
பார்ப்பதிலும்,    கமிட்டியின் சிபாரிசுகளை அனுசரித்து விவசாயிகள்
மசோதா நிறைவேறும்படி செய்வதிலும் ஸர் எட்வர்டு கெயிட் பெரும்
பங்கு  எடுத்துக்கொண்டார். அவர் உறுதியோடு         இல்லாமல்
இருந்திருந்தால்,  இவ்விஷயத்தில் தமது சாமர்த்தியம்  முழுவதையும்
உபயோகிக்காமல் இருந்திருந்தால்,       கமிட்டியின் அறிக்கை ஒரு
மனதாக இருந்திருக்காது.        விவசாயிகள் சட்டம் நிறைவேறியும்
இருக்காது. தோட்ட        முதலாளிகளுக்கிருந்த சக்தி அளவற்றது.
கமிட்டியின் அறிக்கையையும்      பொருட்படுத்தாமல், மசோதாவை
விடாப்பிடியாக   எதிர்த்து வந்தனர். ஆனால், ஸர் எட்வர்டு கெயிட்
கடைசி வரையில் உறுதியுடன்  இருந்தார். கமிட்டியின் சிபாரிசுகளை
எல்லாம் நிறைவேற்றி வைத்தார்.

     ஒரு நூற்றாண்டுக் காலம்     இருந்துவந்த ‘தீன் கதியா’ முறை
இவ்விதம் ஒழிக்கப்பட்டுவிட்டது. அதோடு,  தோட்ட முதலாளிகளின்
ராஜ்யமும் ஒழிந்தது. நெடுகவும்  நசுக்கப்பட்டுக் கிடந்த விவசாயிகள்,
இப்பொழுது சுதந்திரமடைந்தனர். அவுரிக் கறையை அழித்து விடவே
முடியாது என்ற மூட நம்பிக்கையும் பொய்யாகி விட்டது.

     இன்னும் பல        பள்ளிக்கூடங்களை வைத்து, சரியானபடி
கிராமங்களில் புகுந்து வேலை செய்து,   சில ஆண்டுகளுக்கு ஆக்க
வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டு வரவேண்டும் என்பது என்
ஆவல். இதற்கு வேண்டிய       அடிப்படையும் போட்டாகிவிட்டது.
ஆனால், இதற்கு முன்னால்      அடிக்கடி நடந்திருப்பதைப் போல்,
என்னுடைய   திட்டங்கள் நிறைவேறும்படி அனுமதிக்கக் கடவுளுக்கு
விருப்பமில்லை. விதி வேறுவிதமாக      முடிவுசெய்து, வேறிடத்தில்
பணியை மேற்கொள்ள என்னை அங்கே விரட்டிவிட்டது.

20 தொழிலாளருடன் தொடர்பு

     கமிட்டியில்       என் வேலை      முடிந்தும் முடியாமலும்
இருக்கும்போதே ஸ்ரீ மோகன்லால் பாண்டியா,  ஸ்ரீ சங்கர்லால் பரீக்
இவர்களிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. கேடா  ஜில்லாவில்
விளைவு இல்லாது போய்விட்டது என்றும்,   நிலவரியைக் கொடுக்க
முடியாமல் இருக்கும் விவசாயிகளுக்கு நான் வழி   காட்டவேண்டும்
என்றும் அவர்கள்    எழுதியிருந்தார்கள். அந்த இடத்துக்கு நேரில்
போய் விசாரிக்காமல் யோசனை    கூறும் விருப்பமோ, ஆற்றலோ,
தைரியமோ எனக்கு இல்லை.

     அதே சமயத்தில் அகமதாபாத்    தொழிலாளர் நிலைமையைக்
குறித்து ஸ்ரீமதி அனுசூயா பாயிடமிருந்து      ஒரு கடிதமும் வந்தது.
தொழிலாளர் பெற்றுவந்த         கூலி மிகக் குறைவு; கூலி உயர்வு
செய்யவேண்டும் என்று தொழிலாளர்    நீண்ட காலமாகக் கிளர்ச்சி
செய்துகொண்டு வந்தனர். முடிந்தால், அவர்களுக்கு