பக்கம் எண் :

600சத்திய சோதனை

Untitled Document
குறித்த அவருடைய போக்கு எவ்விதம்         இருக்கும் என்பது.
எப்பொழுதும் வெறும் ஊகமாகவும், அதைப்பற்றிச் சிந்திப்பது  வீண்
வேலையாகவுமே         இருக்க முடியும்.  ஆனால், அவருடைய
மரணத்தால் ஏற்பட்ட           ஈடு செய்ய முடியாத நஷ்டத்தைக்
கல்கத்தாவில் கூடியிருந்த ஒவ்வொருவரும்     அதிகமாக உணர்ந்து
வருந்தினார்கள் என்பது  மாத்திரம் நிச்சயம். நாட்டின் சரித்திரத்தில்
ஏற்பட்டிருந்த அந்த நெருக்கடியான        சமயத்தில் அவருடைய
ஆலோசனைகள் கிடைக்காது போனதைக் குறித்து  ஒவ்வொருவரும்
வருந்தினார்கள்.

43 நாகபுரியில்

     காங்கிரஸின் கல்கத்தா     விசேஷ மகாநாட்டில் நிறைவேறிய
தீர்மானங்கள், நாகபுரி வருட மகாநாட்டில்    ஊர்ஜிதம் செய்யப்பட
வேண்டும். கல்கத்தாவைப் போலவே        இங்கும் பிரதிநிதிகளும்
வேடிக்கை பார்ப்போரும் ஏராளமாக வந்திருந்தார்கள். அப்பொழுதும்
காங்கிரஸு க்கு வரும்                   பிரதிநிதிகளின் தொகை
நிர்ணயிக்கப்படவில்லை. இதனால், அம்மகாநாட்டில்  பிரதிநிதிகளின்
தொகை பதினான்கு ஆயிரத்திற்கு வந்துவிட்டது     என்பதே என்
ஞாபகம். பள்ளிக்கூடப்     பகிஷ்காரத்தைப் பற்றிய பகுதியில் சிறு
திருத்தம் செய்ய வேண்டும் என்று லாலாஜி  வற்புறுத்தினார். அதை
நான் ஏற்றுக்கொண்டேன். அதைபோல் தேசபந்துவின் யோசனையின்
பேரில் மற்றும் சில          திருத்தங்களும் செய்யப்பட்டன. பிறகு
ஒத்துழையாமைத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.

     காங்கிரஸ் அமைப்பு         விதிகளின் மாற்றத்தைப் பற்றிய
தீர்மானமும், காங்கிரஸின் இந்த மகாநாட்டிலேயே விவாதத்திற்கு வர
இருந்தது. உபகமிட்டி       தயாரித்திருந்த நகல், கல்கத்தா விசேஷ
மகாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆகையால்,     விஷயம் முழுதும்
அறிவிக்கப்பட்டு           விவாதிக்கப் பட்டிருந்தது.   முடிவாகத்
தீர்மானிப்பதற்காக அது நாகபுரி       மகாநாட்டின் முன்பு வந்தது.
அம்மகாநாட்டிற்கு ஸ்ரீ ஸி.விஜயராகவாச்சாரியார் தலைவர். ஒரே ஒரு
முக்கியமான   மாற்றத்துடன் விஷய ஆலோசனைக் கமிட்டி, நகலை
நிறை வேற்றியது. பிரதிநிதிகளின்      தொகை 1,500 ஆக இருப்பது
என்று நகலில் இருந்தது என்று நினைக்கிறேன். அந்தத் தொகைக்குப்
பதிலாக அந்த இடத்தில் 6,000 என்பதை விஷயாலோசனைக் கமிட்டி
சேர்த்தது. இவ்விதம் இத்தொகையை அதிகரித்தது.    அவசரப்பட்டு
முடிவுக்கு வந்ததன்          பலன் என்பது என் முடிவு. இத்தனை
வருடங்களின் அனுபவமும் என்னுடைய அக்கருத்தையே  ஊர்ஜிதம்
செய்கிறது. காரியங்களைச் சரியாக   நடத்துவதற்குப் பிரதிநிதிகளின்
தொகை அதிகமாக இருப்பது எந்த வகையிலும் உதவியாக இருக்கும்
என்றோ, ஜனநாயகக் கொள்கையை      அது பாதிக்கிறது என்றோ