பக்கம் எண் :

62சத்திய சோதனை

Untitled Document
பிட்டின் பிரசங்கம் ஒன்றைப் படிக்கத் தொடங்கினேன்.

     ஆனால், ஸ்ரீ பெல் என் காதில் எச்சரிக்கை மணியை அடித்தார்.
நானும் விழித்துக் கொண்டு விட்டேன்.

     வாழ் நாளெல்லாம் நான்          இங்கிலாந்திலேயே இருக்கப்
போவதில்லை என்பதை எனக்கு நானே      சொல்லிக் கொண்டேன்.
அப்படியிருக்க, பேச்சுவன்மையைக்    கற்றுக் கொள்ளுவதால் என்ன
பயன் ?    அதோடு நாட்டியமாடுவது என்னை எப்படி ஒரு கனவான்
ஆக்கி விடும் ?         பிடில் வாசிக்க நான் இந்தியாவிலும் கற்றுக்
கொள்ளலாம். நானோ மாணவன்,    ஆகவே என் படிப்பையே நான்
கவனித்துக் கொண்டு போக வேண்டும். பாரிஸ்டராவதற்கு வேண்டியத்
தகுதியையே     நான் அடைய வேண்டும்.  என்னுடைய   ஒழுக்கம்
என்னைக் கனவானாக்கினால்    அதுவே போதும்.   இல்லையானால்
அந்த ஆசையை நான் விட்டுவிட வேண்டியதே.

     இவையும், இவை போன்ற    எண்ணங்களும் என்னைப் பற்றிக்
கொண்டன.   பிரசங்கப் பயிற்சிக்காக நான் அமர்த்திக் கொண்டிருந்த
ஆசிரியருக்கு இந்த என் எண்ணங்களையெல்லாம்    ஒரு கடிதத்தில்
எழுதினேன்.    மேற்கொண்டு பாடல்    கற்றுக் கொள்ள வராததற்கு
மன்னிக்குமாறும்        கேட்டுக்      கொண்டேன்.   நான் கற்றுக்
கொண்டதெல்லாம் இரண்டு மூன்று பாடங்களே.    இதே போல் நடன
ஆசிரியருக்கும் எழுதி விட்டேன். பிடில் வாத்தியாரிடம் நேரில் போய்,
வந்த      விலைக்குப் பிடிலை விற்றுவிடுமாறு கேட்டுக் கொண்டேன்.
அப்பெண்மணி என்னிடம் நட்புடன் பேசினாள். ஆகவே,       நான்
தவறான வழியில் போய்க் கொண்டிருக்கிறேன்    என்பதை உணர்ந்த
விதத்தை அவரிடம் கூறினேன்.  முற்றும் உருமாறுதல்  அடைந்துவிட
வேண்டும் என்பதில் நான் கொண்டிருந்த    முடிவை ஏற்று   அவர்
உற்சாகப்படுத்தினார்.

     ஆங்கிலக் கனவான் ஆகி விட வேண்டும் என்பதில்  எனக்கு
இருந்த மோகம் சுமார் மூன்று மாதங்கள்   இருந்திருக்கும். அதற்குப்
பின் மாணவனாகி விட்டேன். உடை,   சம்பிரதாயப்பூர்வமாக இருக்க
வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதுமாத்திரம் பல  ஆண்டுகள்
என்னிடம் இருந்து வந்தது.

16. மாறுதல்கள்

     நாட்டியத்திலும்,  அது போன்றவைகளிலும்      நான்  செய்த
சோதனை என் வாழ்க்கையில் நெறி தவறிப் போய்விட்ட ஒரு கட்டம்
என்று யாரும் ஊகித்துக் கொண்டுவிட வேண்டாம்.   அச்சமயத்திலும்
கூட நான் மதிமயங்கிப் போய்விடவில்லை     என்பதை  வாசகர்கள்
கவனித்திருப்பார்கள்.   ஆங்கிலக் கனவானாவதில்  எனக்கு மோகம்
இருந்த அந்தக் காலத்திலும் கூட, என் வரையில் ஓரளவுக்கு என்னுள்
ஆன்ம சோதனையும் இல்லாது போகவில்லை. நான்