790-792ஆம் ஆண்டுகளில் பாண்டிநாட்டுக் காவலனாக இருந்தான். இவன் மகன் வரகுண மகாராசன் என்பவன். சோழநாடு முழுவதிலும் வரகுணனின் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. எனவே, அவன் சோழநாடு முழுவதையும் வென்று தன் குடைக் கீழ் கொண்டுவந்தான் என்று ஊகிக்கலாம். வரகுணன் சைவப் பற்றுடையவன்; மணிவாசகரின் வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டிருந்த பெருமை வாய்ந்தவன்; அவருடைய பாடல்களில் தன் பெயரும் இடம்பெறும் பேற்றைப் பெற்றவன். அவன் நாற்பத்து மூன்று ஆண்டுகள் (கி.பி.792-835) |