பக்கம் எண் :

64

64

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்


 

இவருக்கு மட்டும் சிறப்பாக ஒவ்வொரு பெருமாள் கோயிலிலும் தனியே
ஆலயம் உண்டு. விஜய நகரத்து அரசனான கிருஷ்ணதேவராயன் மிகுந்த
வைணவப் பற்றும் ஆண்டாள் பக்தியும் உடையவனாதலின், அவன்
வைணவக் கோயில்களில் ஆண்டாள் சந்நிதியைப் புதிதாக அமைத்தான்.
அவன் காலத்திலும் அதற்குப் பிறகும் ஏற்பட்டவையே ஆண்டாள்
சந்நிதிகள்.

 

    இதுவே கோயிற் கட்டடங்களின் வரலாறு. மூலக்கோயிலைச் சூழ்ந்து
சுற்றாலை மண்டபங்கள் அமைக்கப்பட்டபடியால், மூலக்கோயிலை அடிமுதல்
முடிவரையில் ஒரே மயத்தில் பார்த்து மகிழ முடியாமலிருப்பதைக் குறிப்பிட
விரும்புகிறேன். கோயிலுக்கு வெளியே சற்றுத் தூரத்தில் சென்று
மூலக்கோயிலின் மேற்புற அமைப்பைப் பார்த்து மகிழவேண்டியிருக்கிறது.
முழு உருவத்தை ஒருமித்துப் பார்த்தால்தான் அக்கட்டடக்
கலையின் அழகை நன்கு உணரலாம். மேற்பகுதி, அடிப்பகுதி இரண்டையும்
ஒருமிக்கப் பார்த்து மகிழும் வாய்ப்பு வெகு சில கோயில்களிலேதான்
அமைந்துள்ளது. ஆனால், பல்லவர் காலத்துக் கோயில்களில் இந்த அழகை
முழுவதும் காணலாம்.

 

சிற்பாசாரியர்

 

    கோயிற் கட்டடங்களையும் சிற்பங்களையும் அமைத்த
சிற்பாசாரியர்களின் பெயர்கள் தெரியவில்லை. அவர்கள் பெயர்கள்
மறைந்துவிட்டன. ஆயினும், சில பெயர்கள் மட்டும் தெரிகின்றன.

 

    மகாபலிபுரம் என்னும் மாமல்லபுரத்துக் கோயில்களையும்
பாறைக்கோயில்களையும் அமைத்த சிற்பாசாரியர்களின் பெயர்கள் சில,
மகாபலிபுரத்துக்கடுத்த பூஞ்சேரிக் கிராமத்துக்கு அருகில், நொண்டி வீரப்பன்
குதிரைத் தொட்டி என்னும் ஒரு பாறையில்