தமிழ் இன்பம் I. மேடைப் பேச்சு 1, தமிழாசிரியர் மகாநாடு* தலைமை உரை கல்வித்துறை அமைச்சர் அவர்களே! ஆசிரியத் தோழர்களே! ‘கற்றாரைக் காண்பதுவும் நன்று; கற்றார் சொற் கேட்பதுவும் நன்று; கற்றாரோடு இணங்கி இருப்பதுவும் நன்று’ என்பர் நற்றமிழ் வல்லார். அந் நலத்தை இம் மாகாணத் தமிழாசிரியர்மாநாட்டில் எனக்குச் சிறப்பாகத் தந்த அன்பர்களை மனமாரப் போற்றுகின்றேன். இம் மாநாட்டிலே தமிழ்த்தாயின் மணிக்கொடி ஏறக்கண்டேன்; மனம் களித்தேன். வில்லும் கயலும் வேங்கையும் தாங்கிய மணிக்கொடி, முத்தமிழ் வளர்த்த மூவேந்தரையும் நம் மனக் கண்ணெதிரே காட்டி நிற்கின்றது. அன்பர்களே! இன்று நாம்அனைவரும்
* 1- 3-1946 இல் சென்னையில் நடைபெற்றது. |