பக்கம் எண் :

மேடைப் பேச்சு1

தமிழ் இன்பம்

I. மேடைப் பேச்சு

1, தமிழாசிரியர் மகாநாடு*

தலைமை உரை

கல்வித்துறை அமைச்சர் அவர்களே! ஆசிரியத் தோழர்களே!

‘கற்றாரைக்  காண்பதுவும் நன்று; கற்றார் சொற் கேட்பதுவும்  நன்று;
கற்றாரோடு இணங்கி இருப்பதுவும் நன்று’ என்பர் நற்றமிழ் வல்லார்.

அந்  நலத்தை  இம்  மாகாணத்  தமிழாசிரியர்மாநாட்டில் எனக்குச்
சிறப்பாகத் தந்த அன்பர்களை மனமாரப் போற்றுகின்றேன்.

இம் மாநாட்டிலே தமிழ்த்தாயின்   மணிக்கொடி     ஏறக்கண்டேன்;
மனம்   களித்தேன்.    வில்லும்    கயலும்   வேங்கையும்   தாங்கிய
மணிக்கொடி,   முத்தமிழ்   வளர்த்த   மூவேந்தரையும்  நம்    மனக்
கண்ணெதிரே காட்டி நிற்கின்றது. அன்பர்களே! இன்று நாம்அனைவரும்


* 1- 3-1946 இல் சென்னையில் நடைபெற்றது.