| அவன் சொல்வதெல்லாம் வீராப்பே. அதைச் சொல்லப்போனால் பொல்லாப்பே |
என்று அறிவிக்கும் ‘செல்லப்பிள்ளை, மற்றும் குச்சுநாய், வயிற்றைக்கேள், உலகம் போன்றவை இதற்கு நல்ல உதாரணங்கள் ஆகும், ‘வயிற்றைக்கேள்’ ரசமானது. |
| தலையைச் சொறி நாக்கைக் கடி. பல்லை இளி முதுகை வளை கையைக் கட்டு. காலைச் சேர். என்ன இது? வயிற்றைக் கேள். சொல்லுமது. |
புதுமையான தாலாட்டு ஒன்றையும் தந்திருக்கிறார் அவர், |
| யாரும் அடிக்காமல் நீ ஏன் அழுகின்றாய்? நீ பிறக்காமலிருக்க நான் முயன்றேன் என்ற கடுப்பாலோ; காரணமில்லாமல் நீ ஏன் சிரிக்கின்றாய் எனை ஏமாற்றி நீ பிறந்துவிட்டாய் என்ற களிப்பாலோ! |
இவருடைய கவிதைகள் பலவற்றில் நையாண்டித் தொனிகலந்து உயிரூட்டுகிறது. கண்ணே நீ, எதிர்ப்பு, படிகள் போன்றவை இத்தகையன. உதாரணத்துக்கு, ‘மேற்கத்தியோரே’ கவிதை இங்கே தரப்படுகிறது. |
| ஒரு பக்கம் வாழ வழிவகுக்கும் சாகக் குழி பறிக்கும் உங்களைப் போலல்ல நாங்கள். நாங்களோ வாழவும் விரும்ப மாட்டோம் சாகவும் துணியமாட்டோம் உங்களைப் போலல்ல நாங்கள், வாழாமல் வாழ்ந்து |