| பக்தி, சத்தியம், தியாகம்-இவற்றின் பண்பே வாழ்க்கையின் யூகம் நித்தம் நித்தமிந்த நீதி-தம்மை நீட்டும் இக்கொடியின் ஜோதி. | (கொடி) |
| ஜாதிபேத மதம் இல்லை-மற்றும் சமய பேதமதில் இல்லை நீதி யானபல முறைகள்-நமக்கு நிலைய மாகும் அதன் குறிகள். | (கொடி) |
| என்ன புதுமையிது பாரும்-கொடி ஏதிது போலென்று கூறும் அன்னைக் கொடியிதனைப் பாடி-அதன் அடியில் நின்றுபுகழ் கூடி. | (கொடி) |
| ஏழை எளியவர்கள் யார்க்கும்-பயம் இல்லை யென்ன அறம் காக்கும் வாழி நமதுகொடி வாழி-புது வாழ்வு தந்தினிது ஊழி. | (கொடி) |
வாழிய கொடியே! |
பல்லவி |
| கொடியைக் கும்பிடுவோம்-நம்முடை நாட்டின் கொடியைக் கும்பிடுவோம். | |
| சரணம்
| |
| எந்தக் கடவுளை எவர்தொழு தாலும் எத்தனை வேற்றுமை நமக்கிருந்தாலும் இந்தியர்க் கெல்லாம் பொதுவாம் தெய்வம் இந்தக் கொடியே இதிலென்ன ஐயம், | (கொடி) |