| ‘வேண்டும்’என்ற உறுதியே விடுதலைக்கு வழிவிடும்! யாண்டிருந்து வருவது? யார்கொடுத்துப் பெறுவது? | |
| ‘அடிமையல்லன் நான்’ எனும் ஆண்மையே சுதந்தரம் தடியெடுக்க வேண்டுமோ? சண்டையிட்டு வருவதோ? | |
| ஆசைவிட்ட பொழுதிலே அடிமை வாழ்வும் விட்டிடும்; மீசை துள்ளி வாயினால் மிரட்டினால் கிடைப்பதோ? | |
| அஞ்சுகின்ற தற்றபோது அடிமையற்றுப் போகுமே; நஞ்சுகொண்டு யாரையும் நலிவுசெய்து தீருமோ? | |
| நத்தி வாழ்வ தில்லையென்ற நாளிலே சுதந்தரம்; கத்தி கொண்டு யாரையும் குத்தினாற் கிடைக்குமோ? | |
| கள்ளமற்ற நேரமே காணலாம் சுதந்தரம்; உள்ளிருக்கும் ஒன்றை வேறு ஊரிலார் கொடுப்பவர்? | |
| தீமையோடு உறவுவிட்ட திண்மையே சுதந்தரம் வாய்மையோ(டு) உறவறாத வன்மையே சுதந்தரம். | |