பொருள் விருப்பத்திலே
ஊன்றிய உள்ளமுடையவன் நீதி முறையின்படி
ஒன்றைச்
செய்தல் இல்லை’’
இன்பதுன்பங்களைப் பற்றி இவ்வாசிரியர்
கூறுவது போற்றத் தக்கது.
‘‘துன்பம் வெய்யோர்க்கு
இன்பம் எளிது
துன்பத்தைப் பொருட்படுத்தாமல்
முயற்சியை விரும்புவோர்க்கு இன்பம் எளிதாகும்’’ (8.
பா.5)
‘‘இன்பம் வெய்யோர்க்குத்
துன்பம் எளிது.
இன்பத்தையே விரும்பி
நிற்பவர்களுக்குத் துன்பம் வருவது எளிதாகும்’’
8-பா.6) இவை
இன்ப துன்பந் தோன்றுவதற்கான காரணங்களைக்
கூறின.
‘‘இன்பம் வேண்டுவோன்
துன்பம் தண்டான்.
இன்பத்தை
விரும்புகின்றவன் துன்பத்தைப் பொருட்படுத்த மாட்டான்’’
(10. பா.7) இவை
இன்பம் எய்தும் வழியைக்
கூறின.
‘‘முறையில் அரசன்நாடு நல்கூர்ந்தன்று
மக்கள் எல்லார்க்கும்
சம நீதி வழங்காத நாடு வறுமையால்
வாடும்’’ (9-பா.1)
‘‘முறையில் அரசர் நாட்டிருந்து
பழியார்
|