அங
அங்கண், இங்கண் என்பன அங்கன்,
இங்கன் என மருவி மீண்டும் அங்ஙன், இங்ஙன் என மெலியும்.
எ-டு : |
தீர்த்தத் துறைபடிவே னென்றவனைப்
பேர்த்திங்ஙன் |
|
(சிலப். ) |
தமிழ்ச்சொற்கள் பல இன்னோசைபற்றி
அம்மீறு பெறுதல் பெரும்பான்மை. (இவ் வியல்பை இலத்தீன் மொழியிலும் காணலாம்.)
எ-டு : |
தூண் |
- |
தூணம், |
|
கால |
- |
காலம், |
|
புறவு |
- |
புறவம், |
|
குன்று |
- |
குன்றம், |
|
நெஞ்சு |
- |
நெஞ்சம், |
|
கண்டு |
- |
கண்டம். |
இங்ஙனமே அங்ஙன், இங்ஙன் முதலிய
மரூஉச் சொற் றொடர்களும் அம்மீறு பெற்று அங்ஙனம், இங்ஙனம் என வழங்கும்.
ஓரிடம் மற்றோரிடத்திற்கு வழியாயிருத்தல்பற்றிப்
பொதுவாய் இடப்பெயர்கள் ஒரு வினை செய்யும் வழியை (அதாவது வகையைக்) குறிப்பதுண்டு.
எ-டு
: |
ஆங்கு = அது போல, அப்படி. |
|
அவ்வழி = அப்படி. |
இவ் வியைபினால் வகைப்பெயர்கள்
தடுமாறி இடத்தைக் குறிப்பதுமுண்டு.
எ-டு
: |
இப்படிப் போ = இவ்வழியாய்ப்
போ. |
அங்ஙனம், இங்ஙனம் முதலிய பெயர்களும்
சொற்படி முதலில் இடத்தைக் குறித்தனவேனும், பின்பு இடம்-வழி-வகை என்னும் இயைபுபற்றி ஆகுபெயர்த்
தன்மையில் வகை, விதம் என்னும் பொருள் தருவவாயின.
இனி, அங்ஙனம், இங்ஙனம் முதலிய
சொற்றொடர்த் திரிபுகள் அம்மட்டிலமையாது அன்னணம், இன்னணம் முதலிய திரிபுங் கொள்ளும். நன்னூலாரே,
இன்ன தின்னுழி யின்னண மியலும் |
(நன்.
460) |
எனத் தம் உரியியற் புறனடையிற்
கூறியுள்ளார். ஆதலின்,
சுட்டியா வெகர வினாவழி யவ்வை |
|
ஒட்டி ஙவ்வு முதலா
கும்மே |
(நன்.
106) |
எனச் சூத்திரித்தவர்,
சுட்டியா வெகர வினாவழி யவ்வை |
ஒட்டி னவ்வு முதலா
கும்மே |
எனச் சூத்திரியாதொழிந்தது குன்றக்
கூறலாமன்றோ? ஆதலான், தொல்காப்பியர்க்கு முற்காலத் தமிழிலன்றிப் பிற்காலத் தமிழில்
ஙம்முதலே யில்லையென்று தெள்ளிதிற் றெளிக.
- ``செந்தமிழ்ச் செல்வி''
கடகம் 1936 |
|