6
6. நிகழ்கால வினை
தொல்காப்பியர்,
நிலனும் பொருளுங் காலமுங்
கருவியும் |
|
வினைமுதற் கிளவியும் வினையும்
உளப்பட |
|
அவ்வறு பொருட்கும் ஓரன்ன உரிமைய |
|
செய்யும் செய்த என்னுஞ்
சொல்லே.
|
(719) |
என்னும் பெயரெச்ச வாய்பாட்டு நூற்பாவில்,
'செய்கின்ற' ('செய்கிற') என்னும் நிகழ்காலப் பெயரெச்ச வாய்பாட்டைக் கூறாமையானும்; வினையெச்ச
வாய்பாட்டு நூற்பாவில் அவர் முக்கால வினையெச்சங்களையும் கூறியிருப்பினும், நிகழ்கால வினையெச்சத்தில்
நிகழ்கால இடைநிலை (கின்று-கிறு) இயல்பாய் அமையாமையானும்;
முந்நிலைக் காலமுந் தோன்றும்
இயற்கை |
|
எம்முறைச் சொல்லும் நிகழுங் காலத்து |
|
மெய்ந்நிலைப்
பொதுச்சொற் கிளத்தல் வேண்டும் |
(725) |
என்னும் தொல்காப்பிய நூற்பாவிற்கு,
மலைநிற்கும், ஞாயிறியங்கும் |
என்பன போன்றும்,
மிக்கதன் மருங்கின் வினைச்சொற்
சுட்டி |
|
அப்பண்பு குறித்த வினைமுதற்
கிளவி |
|
செய்வ தில்வழி நிகழுங் காலத்து |
|
மெய்பெறத் தோன்றும்
பொருட்டா கும்மே |
(727) |
என்னும் தொல்காப்பிய நூற்பாவிற்கு,
"தவஞ்செய்தான் சுவர்க்கம்
புகும், தாயைக் கொன்றான் நிரயம் புகும்" என்பன போன்றும், எதிர்காலத்திற்குரிய 'செய்யும்'
என்னும் முற்றையே உரையாசிரியன்மார் எடுத்துக்காட்டி வந்திருப்பதானும், 'செய்கின்றான்' என்னும்
வாய்பாட்டுச் சொல் உருத்தெரியாதவாறு திரிந்தன்றித் தொல் காப்பியத்தில் ஓரிடத்தும்
வாராமையானும்; `செய்கின்ற‘ என்னும் வாய்பாட்டுச் சொல்லோ அங்ஙனந் திரிந்தேனும் அதன்கண்
வாராமையானும்; இடையியலில் முக்கால இடைநிலைகளைக் குறிப்பிடுமிடத்து,
|