பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்21

25. திருக்குறள்
'மருகேலரா' என்ற மெட்டு
பண் - (சயந்தத்திரு)
தாளம் - முன்னை
ப.
குறள்மாமறை கொள்வாயுறை
து. ப.
அறவாழி யருளால் அறவாழ்வும துறவும்
அரசாள்வும் பொருளும் அகவின் பமு யாரும்
(குறள்)
அ. 1
பிறப்பாலே யாரும் பிறங்காரே பாரும்
சிறப்பாலே வேறு செயும்வினைப் பேறு
அறப்பா லிரண்டும்அனைவர்க்கும் ஒன்றும்
அருட்பாலை ஓவார் அந்தணாள ராவார்
(குறள்)
2
வேளாளனே யாவான் விழுமியே வாழ்வான்
விருந்தோம்பும் ஆறு வீடும்பெறும் பேறு
தாளாளன் தன்மானம் தவாது நால்வலியும்
தகவெண் தீர்மானம் தரும்வென் வினை
(குறள்)
26. திருக்குறட் சிறப்பு
'எதுடநி லிசிதே' என்ற மெட்டு
ப.
இணையாமோ முப்பாற்கே ஏனை நூலே
இந்த ஞால மே
து. ப.
இணையடிகளால் எல்லா ரெண்ணமும் அளந்து
தினைநீர்ப் பனைபோல் தெள்ளத் தெளிக்க
(இணை)