|
து. ப. |
| முத்திறமும் நடுவன் - மிக | | ஒத்துரைக்கும் குடவன் (முத்.) |
|
உ. |
| உடன்பிறப் பன்பென்பதே - வடி | | வுற்றவன்கொள் பண்பிதே | | மடந்தபச் சொன்ன புதை - தமிழ் | | மறந்திகழ் கற்பின் கதை. (முத்.) |
|
30. யார் யார் எவ்வெப்பா வல்லார்? |
|
(இசைந்த மெட்டிற் பாடுக) |
1 |
| வெண்பா விற்கே புகழேந்தி | | விரியும் அகவற் கிளங்கோவே | | பின்பாங் கலியே பெருங்கடுங்கோ | | பிரிவஞ் சியுருத் திரங்கண்ணன். |
|
2 |
| குறள்வெண் பாவில் திருவள்ளுவன் | | குறையின் னிசைமுன் றுறையரையன் | | திரள்பஃ றொடையுமா பதிசிவனாம் | | திரியுங் கலிவெண் பாகூத்தன். |
|
3 |
| கொச்சகத் தரவருள் மொழித்தேவன் | | கோவைத் துறைமணி வாசகனார் | | மெச்சுங் கலித்துறை திருத்தக்கார் | | மேவும் திலதமுங் கோவையெலாம். |
|
4 |
| தாழிசைத் தலைவன் சயங்கொண்டான் | | தகும்பல் மண்டிலம்* பெருங்கம்பன் | | பாழிசை மருட்பா ஆரிதனார் | | பரிபா டல்நல் லந்துவனார். |
|
*மண்டிலம் = விருத்தம் |