பக்கம் எண் :

24இசைத்தமிழ்க் கலம்பகம்

து. ப.
முத்திறமும் நடுவன் - மிக
ஒத்துரைக்கும் குடவன்
(முத்.)
உ.
உடன்பிறப் பன்பென்பதே - வடி
வுற்றவன்கொள் பண்பிதே
மடந்தபச் சொன்ன புதை - தமிழ்
மறந்திகழ் கற்பின் கதை.
(முத்.)
30. யார் யார் எவ்வெப்பா வல்லார்?
(இசைந்த மெட்டிற் பாடுக)
1
வெண்பா விற்கே புகழேந்தி
      விரியும் அகவற் கிளங்கோவே
பின்பாங் கலியே பெருங்கடுங்கோ
      பிரிவஞ் சியுருத் திரங்கண்ணன்.
2
குறள்வெண் பாவில் திருவள்ளுவன்
      குறையின் னிசைமுன் றுறையரையன்
திரள்பஃ றொடையுமா பதிசிவனாம்
      திரியுங் கலிவெண் பாகூத்தன்.
3
கொச்சகத் தரவருள் மொழித்தேவன்
      கோவைத் துறைமணி வாசகனார்
மெச்சுங் கலித்துறை திருத்தக்கார்
      மேவும் திலதமுங் கோவையெலாம்.
4
தாழிசைத் தலைவன் சயங்கொண்டான்
      தகும்பல் மண்டிலம்* பெருங்கம்பன்
பாழிசை மருட்பா ஆரிதனார்
      பரிபா டல்நல் லந்துவனார்.
        *மண்டிலம் = விருத்தம்