|
5 |
| வண்ணத் திற்கே அருணகிரி | | வசைபா டற்கே காளமேகம் | | எண்ணிக் கொடுத்த அடிமுடிப்பில் | | இலகும் முனிவர் சிவஞானம். |
|
6 |
| கடும்பா விற்குக் காளமேகம் | | கருதும் இன்பா வெண்காடர் | | அரும்பா மாம்பழப் பாவரிமா | | அகலப் பாவும் மிகுகம்பன். |
|
31. தமிழ்நாடு |
|
'பாருக் குள்ளே நல்ல நாடு' என்ற மெட்டு |
ப. |
| நானி லத்தே நல்ல நாடு - என்றும் | | நம்தமிழ் நாடு |
|
அ. |
| நானிலத் தும்மிகு நன்னிலத் தில்விளை | | நால்வகைச் செல்வமும் சால்வதுடன் | | வேனிலிற் கான்மலை வெம்மைகொள் பாலைபின் | | விளைநில மாவதிந் நாடு (நானிலத்) |
|
2 |
| பொன்னொடு வெள்ளியும் போற்றும்பல் விரையும் | | போர்வை பல்லணியுடை வேர்மருந்தும் | | மின்னும்பல் மணிகளும் மிகுவிலை யாற்பெற | | மேலுலகும் விரும்பும் நாடு (நானிலத்) |
|