பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்25

5
வண்ணத் திற்கே அருணகிரி
      வசைபா டற்கே காளமேகம்
எண்ணிக் கொடுத்த அடிமுடிப்பில்
       இலகும் முனிவர் சிவஞானம்.
6
கடும்பா விற்குக் காளமேகம்
      கருதும் இன்பா வெண்காடர்
அரும்பா மாம்பழப் பாவரிமா
      அகலப் பாவும் மிகுகம்பன்.
31. தமிழ்நாடு
'பாருக் குள்ளே நல்ல நாடு' என்ற மெட்டு
ப.
நானி லத்தே நல்ல நாடு - என்றும்
      நம்தமிழ் நாடு
அ.
நானிலத் தும்மிகு நன்னிலத் தில்விளை
       நால்வகைச் செல்வமும் சால்வதுடன்
வேனிலிற் கான்மலை வெம்மைகொள் பாலைபின்
       விளைநில மாவதிந் நாடு
(நானிலத்)
2
பொன்னொடு வெள்ளியும் போற்றும்பல் விரையும்
       போர்வை பல்லணியுடை வேர்மருந்தும்
மின்னும்பல் மணிகளும் மிகுவிலை யாற்பெற
       மேலுலகும் விரும்பும் நாடு
(நானிலத்)