|
3 |
| கன்றுதனை யிழந்து கதறிய ஆவினால் | | கடைமணி யசையவும் காவலனும் | | கொன்றுதன் மகனையே கொடுமையை நிமிர்த்துச்செங் | | கோன்முறை குலவிய நாடு (நானிலத்) |
|
4 |
| கூலிகொடுத் தினிய கரும்புதினச் சொல்லிக் | | கூடிய விருந்தின்பின் மிச்சிலுண்டு | | நீலியின் கணவற்கு நிகழ்த்திய வாய்மொழி | | நிறைவேற்றின வேளாளர் நாடு (நானிலத்) |
|
5 |
| வறுமையால் வாடிய வண்டமிழ்ப் புலவனும் | | வாழவென் றரசன்தன் தலையுந் தந்தே | | அறியாது முரசணை அயர்ந்திடும் புலவர்க்கும் | | ஆலவட்டம் விசிறும் நாடு (நானிலத்) |
|
6 |
| முத்தமி ழிலக்கணம் முதுமறை மந்திரம் | | முன்னரும் பல்கலை இன்குறளே | | சித்தரின் மருத்துவம் சிறந்தபொன் னாக்கமும் | | சிலம்பொடு திகழ்ந்ததிந் நாடு (நானிலத்) |
|
32. தாய்நாட்டு வழுத்து |
|
'வந்தே மாதரம்' என்ற மெட்டுவகை |
ப. |
தாய்நாடே போற்றி |
உ. 1 |
| சேயரின் வாழ்நாள் சிறந்திடக் கனியும் | | சீரிய வுணவும் செம்பொனும் மணியும் | | வாயுறை பலவும் வழங்குவை இனியும் | | வண்பெருந் தமிழே வழிவழி யணியும் (தாய்) |
|