பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்27

2
சேரல சோழ பாண்டியர் என்று
    செந்தமிழ் வேந்தர் மூவரும் நின்று
போரற நாவல் புரந்திட நன்று
   பொலிந்தனை நீடு புகழவே பண்டு
(தாய்)
3
முல்லையும் வண்டும் முருகுயர் மயிலும்
   முதலிய பலவும் முனிவறப் பயிலும்
வல்லமை யில்லார் வந்திடின் இயலும்
   வகைபல தருவை வாழவே அயலும்
(தாய்)
33. நாவலம் முதலில் 'மூவர் தண்பொழில்'
'திரிலோகமும் புகழும் சுந்தர' என்ற மெட்டு
பண் - (மத்தியமாவதி)
தாளம் - ஈரொற்று
ப.
மூவேந்தரே முதலில் நாவலம்
மூன்று நாடாய் ஆண்டு வந்தார்.
து. ப.
முந்நாட்டுஞ் சேரவே மண்ணாட்டு நாரதன்
மூன்றென் உலகு தோன்ற வுலவும்
(மூவேந்)
அ.1
பாவேந் தர்முன் பரவு குமரி
பரவை கொண்டது பழநற் பாண்டி
தாவீந்தருள் திருவிற் பாண்டியன்
தந்த கூற்றம் தான்பிற் பாண்டி
(மூவேந்)
2
வடநாடு திராவிட மானபின்
வந்த தாரியம் இந்தியா என்ன
இடமே குன்றி எல்லைதென் தள்ளியே
இன்றமிழ்நா டின்றிந் நிலைமை
(மூவேந்)