ப. |
| வடபா லுயர்ந்து தென்பாலே தாழ்ந்து | | வழுதிநா டுண்டது வார்கடலே |
|
உ.1 |
| இடமான நாடும் எழுநூறு காதம் | | எல்லையில் பொருளோடும் இரையானதோ | | இடைமன்ற மும்மேல் எண்ணா யிரம்நூல் | | ஏதுமே யில்லாமல் இறந்தாழ்ந்ததோ (வடபா) |
|
2 |
| பல்லா யிரஞ்சொல் பல்வேறு நுண்மைப் | | பாகுபாடு செய்தும் பாழானவோ | | இல்லாத சொல்லும் இணைத்தென்றும் கொள்ள | | இருந்தபல் வேர்ச்சொல்லும் ஏதானவோ (வடபா) |
|
3 |
| தலையாக நின்று தன்மானத் தோடு | | தமிழன்தான் முன்னேறத் தடைவேறுண்டோ | | நிலையேது மின்றி நெடிதாகக் குன்றி | | நின்ற துயர்தீரும் நிலைதா னுண்டோ (வடபா) |
|