|
3 |
| நூற்றிற்கு மூவர் என்றும் - பிறரை | | மாற்றிக் கெடுத்த லுண்டோ | | வேற்று மொழியினை விண்ணவரது வென்றே | | ஏற்றித் தொழுததால் இழிந்தது தமிழே (தன்) |
|
4 |
| காட்டிக் கொடுப்ப வர்தாம் - தமரைக் | | கேட்டிற்குள் ளாக்கு கின்றார் | | மீட்டும் முற்பெருமை மேற்கொளத் தமிழனையே | | நாட்டின் அரியணை நன்றாகும் பிறவும் (தன்) |
|
5 |
| வெள்ளை நிறப்பொலிவும் - ஆரியர் | | விள்ளுங் கனைப்பொலியும் | | நள்ளுந் தெய்வமென நம்பவே செய்ததினால் | | எள்ளும் தாழ்நிலையை ஏற்றார் தமிழரே (தன்) |
|
44. தமிழரே தம்மைக் கெடுத்தமை |
|
'சுசன சீவனா' என்ற மெட்டு |
பண் - (கமாசு) தாளம் - ஈரொற்று |
ப. |
| தமிழரே தமைமிகத் தடிந்த பேதைமை தீதே |
|
து. ப. |
| தமியர் ஏதுமே படைதழுவா தேதமே | | தமக்கிந்த நாளும்பு ரிந்தனர் எனின் | | தமிழர் மீதுமே கோதே (தமிழரே) |
|
உ. |
| பல்வேள்விச் சாலை முதுகுடுமிப்பேர் வழுதி பல்யானைச் | | செல்கெழு குட்டுவன் இராசசூயம்வேட்ட பெருநற் கிள்ளிபோல் | | எள்ளளவும் உண்மைஉளந் தெள்ளி யறியாமை | | வடவாரியம் தெய்வச் சீரியம் எனும் | | திரிபில் நாட்டினர் கேட்டை (தமிழரே) |
|