பக்கம் எண் :

38இசைத்தமிழ்க் கலம்பகம்

3
நூற்றிற்கு மூவர் என்றும் - பிறரை
    மாற்றிக் கெடுத்த லுண்டோ
வேற்று மொழியினை விண்ணவரது வென்றே
    ஏற்றித் தொழுததால் இழிந்தது தமிழே
(தன்)
4
காட்டிக் கொடுப்ப வர்தாம் - தமரைக்
    கேட்டிற்குள் ளாக்கு கின்றார்
மீட்டும் முற்பெருமை மேற்கொளத் தமிழனையே
    நாட்டின் அரியணை நன்றாகும் பிறவும்
(தன்)
5
வெள்ளை நிறப்பொலிவும் - ஆரியர்
    விள்ளுங் கனைப்பொலியும்
நள்ளுந் தெய்வமென நம்பவே செய்ததினால்
    எள்ளும் தாழ்நிலையை ஏற்றார் தமிழரே
(தன்)
44. தமிழரே தம்மைக் கெடுத்தமை
'சுசன சீவனா' என்ற மெட்டு
பண் - (கமாசு)
தாளம் - ஈரொற்று
ப.
தமிழரே தமைமிகத் தடிந்த பேதைமை தீதே
து. ப.
தமியர் ஏதுமே படைதழுவா தேதமே
தமக்கிந்த நாளும்பு ரிந்தனர் எனின்
தமிழர் மீதுமே கோதே
(தமிழரே)
உ.
பல்வேள்விச் சாலை முதுகுடுமிப்பேர் வழுதி பல்யானைச்
செல்கெழு குட்டுவன் இராசசூயம்வேட்ட பெருநற் கிள்ளிபோல்
எள்ளளவும் உண்மைஉளந் தெள்ளி யறியாமை
வடவாரியம் தெய்வச் சீரியம் எனும்
திரிபில் நாட்டினர் கேட்டை
(தமிழரே)