|
45. வடமொழியால் தமிழுக்கு வந்தகேடு |
|
'டம்பனவன் வீடேலம்' என்ற மெட்டு வகை |
1 |
| வடமொழியாற் செந்தமிழ்க்கே வந்தகேட்டைச் சொல்வேன் | | மடமையற முந்தவற்றை நின்றுகேட்டுச் செல்வீர். |
|
2 |
| நூலழிவு கலையழிவு நுவலும்மொழி யிழிவு | | மேலும்மொழி வளராமை மெய்வரலாற் றழிவு. |
|
3 |
| சொல்லிழிபு சொன்மறைவு சொல்லின்வழக் கழிவு | | சொற்பொருளின் மாற்றமொடு சோர்வுபின்னே யொழிவு. |
|
4 |
| தூயபல தென்சொல்வட சொல்லெனவே தோற்ற | | ஆயினசொல் வந்தவழி ஐயமொடு மாற்றம். |
|
5 |
| தமிழ்வளமும் தூய்மையும்போய்த் தன்மைகெட்ட தாலே | | தமிழனுக்கும் வறுமைவந்து தாழ்வுமுட்டு மேலே. |
|
6 |
| தமிழனுக்கே முன்பிருந்த தாய்மொழியிற் பற்றே | | குமரிமலை சென்றதெனக் குன்றியேபோ யிற்றே. |
|
7 |
| வடமொழியைத் தேவமொழி யென்றுமிக நம்பி | | தடமொழியைத் தாழ்த்திவிட்டான் தமிழனே திரும்பி. |
|