பக்கம் எண் :

42இசைத்தமிழ்க் கலம்பகம்

48. தமிழின் படிமுறைத் தாழ்வு
'மண்டலம் புகழும்' என்ற மெட்டு
1
இந்த வுலகினில் முந்தி யரியணை கொண்டது செந்தமிழ் நீடு
பிந்தியா ரியரை யுந்தெய்வ மென்றுமேற் கொண்டதால் வந்ததுகேடு.
(இந்த)
2
தேவ மொழியென்று கோவில் வழிபடப் பாவிய தாரிய வாழ்வு
கோவர சேயிதை ஏவிய பின்தமிழ் மேவிய தேபெருந் தாழ்வு
(இந்த)
3
நூலுங் கலைகளும் சாலுந் தமிழ்நின்று கோலும் வடமொழி பேர்ந்த
மூலம் படிகளே போலுந் தெரிந்துபின் மீளு நிலையின்றித் தீர்ந்த
(இந்த)
4
ஆரிய வன்சொல்லைச் சாரு முயர்வென்று வாரி வழங்கியே பேணிச்
சீரிய செந்தமிழ் பேரிழப் புண்டது சோறென்று சொல்லவும் நாணி
(இந்த)
5
தாய்மொழிப் பற்றெலாம் மாய்ந்துபோய் விட்டதால் தன்னது
     வேறென்றே யில்லை
வாய்மொழி யிற்றைநாள் தோய்ந்தது முற்றுமே வண்ணமில்
     வேறுபல் சொல்லை
(இந்த)