|
48. தமிழின் படிமுறைத் தாழ்வு |
|
'மண்டலம் புகழும்' என்ற மெட்டு |
1 |
| இந்த வுலகினில் முந்தி யரியணை கொண்டது செந்தமிழ் நீடு | | பிந்தியா ரியரை யுந்தெய்வ மென்றுமேற் கொண்டதால் வந்ததுகேடு. (இந்த) |
|
2 |
| தேவ மொழியென்று கோவில் வழிபடப் பாவிய தாரிய வாழ்வு | | கோவர சேயிதை ஏவிய பின்தமிழ் மேவிய தேபெருந் தாழ்வு (இந்த) |
|
3 |
| நூலுங் கலைகளும் சாலுந் தமிழ்நின்று கோலும் வடமொழி பேர்ந்த | | மூலம் படிகளே போலுந் தெரிந்துபின் மீளு நிலையின்றித் தீர்ந்த (இந்த) |
|
4 |
| ஆரிய வன்சொல்லைச் சாரு முயர்வென்று வாரி வழங்கியே பேணிச் | | சீரிய செந்தமிழ் பேரிழப் புண்டது சோறென்று சொல்லவும் நாணி (இந்த) |
|
5 |
| தாய்மொழிப் பற்றெலாம் மாய்ந்துபோய் விட்டதால் தன்னது | | வேறென்றே யில்லை | | வாய்மொழி யிற்றைநாள் தோய்ந்தது முற்றுமே வண்ணமில் | | வேறுபல் சொல்லை (இந்த) |
|