பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்43

49. தமிழ்நாடு வரவரத் தேய்ந்தமை
'நானிருப்ப தேழடுக்கு மாடி' என்ற மெட்டு
1
நாவலம் எல்லாம்முன் தமிழ்நாடு - அதில்
    நண்ணியது செந்தமிழ்ப் பண்பாடு
மூவரான வேந்தர் முடியொடு - அதை
   முன்னர்ஆண்டு வந்தனரே நீடு
(நாவலம்)
2
தென்குமரி மலைமுது பாண்டி - நிலம்
    திரைகடல் புகுந்தது காண்டி
செந்தமிழ் நிலத்தின்எல்லை தாண்டி - மிகச்
    சிறுகிவந்த தேதேரை தீண்டி
(நாவலம்)
3
ஆரியம் வந்துபுகுந்த அன்றே - விந்தம்
    அடைந்தது வடவெல்லை யென்றே
சீரிய தமிழ்திரிந்த பின்றே - வடம்
    செப்பின எல்லை வேங்கடக் குன்றே
(நாவலம்)
4
கழகத்தின் பின்னேகரு நடமும் - மெல்லக்
    கரைந்துவந்த கொங்குநாட் டிடமும்
அழகிற் சிறந்தசேரன் குடமும் - ஆகும்
   அரையாரி யத்தென்திர விடமும்
(நாவலம்)
5
இன்றுதமிழ் நாட்டுவடம் சென்னை - அதும்
    எதிர்ப்பு மிகுந்ததிடை யென்னை
முன்று தமிழ்ப்பேரு மில்லை பின்னை - முற்றும்
    முடித்திடுவாரோ தமிழ் தன்னை
(நாவலம்)