|
50. இறந்துபட்ட தமிழ்நூல்கள் |
|
'எப்படிப் பாடினரோ' என்ற மெட்டு |
ப. |
| எத்திறம் இறந்தனவோ அத்திறம் அவன் அறிவான். |
|
அ. 1 |
| முத்தமிழ் நூல்களும் முதுநாரை யுங்குருகும் | | வித்திய களரியா விரைவியாழ மாலையும் (எத்திறம்) |
|
2 |
| சித்தரின் பொன்னாக்கமும் சிறந்த மருத்துவமும் | | எத்தகை யென்றுபண்டே எவருக்குந் தெரியாமல் (எத்திறம்) |
|
3 |
| இன்னறு பாக்களும் இருபது வண்ணமும் | | எண்பெரு வனப்பொடு எழுநிலச் செய்யுள்களும் (எத்திறம்) |
|
4 |
| ஏரணம் உருவமும் எண்ணொடு கணியமும் | | வாரணம் ஒன்றேகலை வகையெ(ல்)லாம் வாரியதோ (எத்திறம்) |
|
5 |
| இடைக்கழகத் திருந்த எண்ணாயிர நூல்களும் | | கிடைக்காமற் போனதென்ன கிளந்த பெயரினோடும் (எத்திறம்) |
|
6 |
| வேந்தரின் பேதமையோ விரிகடற் கொடுமையோ | | தீந்தமிழோர் வறுமைத் தீயோ பிறர்பகையோ (எத்திறம்) |
|
7 |
| தில்லைப்பொன் னம்பலத்தில் தேவாரம் பெரும்பாலும் | | செல்லரித் தடச்சிவன் திருவுளங் கொண்டதென்னோ (எத்திறம்) |
|
8 |
| ஆண்டுதொறுங் கூடி ஆடிப்பதி னெட்டாம்நாள் | | ஈண்டிவருங் காவிரி எறிந்ததமிழ் நூலெல்லாம் (எத்திறம்) |
|
9 |
| பாண்டித் துரைத்தேவர் பாடுபட்டுத் தொகுத்த | | பண்டைத்தமிழ் நூல்கள்தீப் பற்றியே மதுரையில் (எத்திறம்) |
|