பக்கம் எண் :

44இசைத்தமிழ்க் கலம்பகம்

50. இறந்துபட்ட தமிழ்நூல்கள்
'எப்படிப் பாடினரோ' என்ற மெட்டு
ப.
எத்திறம் இறந்தனவோ அத்திறம் அவன் அறிவான்.
அ. 1
முத்தமிழ் நூல்களும் முதுநாரை யுங்குருகும்
வித்திய களரியா விரைவியாழ மாலையும்
(எத்திறம்)
2
சித்தரின் பொன்னாக்கமும் சிறந்த மருத்துவமும்
எத்தகை யென்றுபண்டே எவருக்குந் தெரியாமல்
(எத்திறம்)
3
இன்னறு பாக்களும் இருபது வண்ணமும்
எண்பெரு வனப்பொடு எழுநிலச் செய்யுள்களும்
(எத்திறம்)
4
ஏரணம் உருவமும் எண்ணொடு கணியமும்
வாரணம் ஒன்றேகலை வகையெ(ல்)லாம் வாரியதோ
(எத்திறம்)
5
இடைக்கழகத் திருந்த எண்ணாயிர நூல்களும்
கிடைக்காமற் போனதென்ன கிளந்த பெயரினோடும்
(எத்திறம்)
6
வேந்தரின் பேதமையோ விரிகடற் கொடுமையோ
தீந்தமிழோர் வறுமைத் தீயோ பிறர்பகையோ
(எத்திறம்)
7
தில்லைப்பொன் னம்பலத்தில் தேவாரம் பெரும்பாலும்
செல்லரித் தடச்சிவன் திருவுளங் கொண்டதென்னோ
(எத்திறம்)
8
ஆண்டுதொறுங் கூடி ஆடிப்பதி னெட்டாம்நாள்
ஈண்டிவருங் காவிரி எறிந்ததமிழ் நூலெல்லாம்
(எத்திறம்)
9
பாண்டித் துரைத்தேவர் பாடுபட்டுத் தொகுத்த
பண்டைத்தமிழ் நூல்கள்தீப் பற்றியே மதுரையில்
(எத்திறம்)