|
51. மாவலி மாவேந்தன் |
|
‘சுயராசியம் அதிகத் தூரமில்லை’ என்னும் மெட்டுவகை |
ப. |
| மாவலி யென்பானொரு மாபெருஞ் சேரவேந்தன், மானமிகுந் | | தமிழ மறவனன்றோ. |
|
து. ப. |
| பாவலரும் பின்னரே பகையொடு சேர்ந்தவனைப் | | பழித்துவரும் மடமைத் திறமும் நன்றோ (மாவலி) |
|
உ.1 |
| நாவலந் தீவிலெங்கும் நாயகச்செங் கோலோச்சி | | நன்மை பலவுஞ் செய்த காவலனே | | யாவரும் எதிர்க்கினும் யானைத்திரளைக் கொல்லும் | | யாளிபோல் வெல்லும் பெருமாவலனே (மாவலி) |
|
2 |
| தேவருக் கென்றும்பல தீமைசெய்து வந்ததால் | | திருமாலின் அடியினால் தீர்ந்தான் என்பார் | | தேவுரையே மாற்றிலும் திருப்பற்று வாய்மை வண்மை | | திடமாயவன் கொண்டதைத் தேர்ந்து முன்பார் (மாவலி) |
|
3 |
| மாவலி மரபிலே வந்த சீர்த்தியைக் கிள்ளி | | வளவனுந் தேவியாக மணந்திருந்தான் | | மாவலி மருகராம் வாணகோ வரையரும் | | வளவன்கீழ்ச் சிற்றரசாய் இணைந்திருந்தார் (மாவலி) |
|
4 |
| ஆரியத்தை யெதிர்த்த அருந்தமிழ் வேந்தரெல்லாம் | | அசுரரென்றே பண்டைநாள் அழிக்கப்பட்டார் | | சீரிய அறிவியல் செழித்துவரு மிந்நாளும் | | செந்தமிழ்த் தலைவரே பழிக்கப்பட்டார் (மாவலி) |
|
5 |
| திருவோண நாளிலின்றும் குடிகளின் நலங்காணத் | | திரும்பிவரும் மாவலி என்று சொல்வார் | | அருளோடும் அவன்அந்நாள் அரசுபுரிந்த வுண்மை | | அறிவிக்கும் இதுவொன்றே கண்டு கொள்வீர் (மாவலி) |
|