பக்கம் எண் :

46இசைத்தமிழ்க் கலம்பகம்

52. தமிழன் வீழ்ச்சி
'பூமியில் மானிடர் சென்ம மடைந்துமோர்' என்ற மெட்டு
1
மாநிலத் தில்முனம் மற்றையர் யாவரும்
    மல்கிய இருளில் மயங்கிய நாள்
மாநலத் தன்மனை மாணுற வாழ்ந்தவன்
    மருவிய குமரித் தமிழன்தான்.
2
குப்பை யுயர்ந்தது கோபுரந் தாழ்ந்தது
     குடிபுகுந் திரந்தவன் கோவானான்
ஒற்றுமை யில்லாமல் உலைந்துபோய்த் தமிழன்தான்
     ஊமை யடிமையென உழல்கின்றான்.
3
பட்ட மெனமிசை பறந்துபோய் மேலையர்
    பரவெளி நாடும் காலமிதே
கட்டை வண்டிசெய்து கையிறாட்டை சுற்றிக்
    கரடுறு நூலிழைப் பான்தமிழன்.
4
பல்கலைக் கழகத்துப் பட்டமெல்லாம் பெற்றும்
    பாரெங்குஞ் சுற்றியும் பதவி கொண்டும்
தள்ளியே தான்தன்னைத் தாழ்ந்தவ னென்றெண்ணித்
    தண்ணீருஞ் சிலர்க்கிடத் தயங்குகின்றான்.
5
ஆரியர் வருமுனம் அருந்தமி ழிருந்தநூல்
    ஆயிரக் கணக்கவை அழிந்தனவே
சீரிய தமிழ்க்கலை செயற்கையாம் வடமொழிச்
    சென்றுதிரிந் தயலாய்க் கழிந்தனவே.