|
52. தமிழன் வீழ்ச்சி |
|
'பூமியில் மானிடர் சென்ம மடைந்துமோர்' என்ற மெட்டு |
1 |
| மாநிலத் தில்முனம் மற்றையர் யாவரும் | | மல்கிய இருளில் மயங்கிய நாள் | | மாநலத் தன்மனை மாணுற வாழ்ந்தவன் | | மருவிய குமரித் தமிழன்தான். |
|
2 |
| குப்பை யுயர்ந்தது கோபுரந் தாழ்ந்தது | | குடிபுகுந் திரந்தவன் கோவானான் | | ஒற்றுமை யில்லாமல் உலைந்துபோய்த் தமிழன்தான் | | ஊமை யடிமையென உழல்கின்றான். |
|
3 |
| பட்ட மெனமிசை பறந்துபோய் மேலையர் | | பரவெளி நாடும் காலமிதே | | கட்டை வண்டிசெய்து கையிறாட்டை சுற்றிக் | | கரடுறு நூலிழைப் பான்தமிழன். |
|
4 |
| பல்கலைக் கழகத்துப் பட்டமெல்லாம் பெற்றும் | | பாரெங்குஞ் சுற்றியும் பதவி கொண்டும் | | தள்ளியே தான்தன்னைத் தாழ்ந்தவ னென்றெண்ணித் | | தண்ணீருஞ் சிலர்க்கிடத் தயங்குகின்றான். |
|
5 |
| ஆரியர் வருமுனம் அருந்தமி ழிருந்தநூல் | | ஆயிரக் கணக்கவை அழிந்தனவே | | சீரிய தமிழ்க்கலை செயற்கையாம் வடமொழிச் | | சென்றுதிரிந் தயலாய்க் கழிந்தனவே. |
|